search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worried"

    • 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.

    பல்லடம் : 

    பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளகிணறு,ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 1000 கிலோ முதல்2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம்.

    கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூ விற்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோழி கொண்டை பூ விவசாயிகள் கூறுகையில், முன்பு முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.60 க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30,ஆக சரிந்து விட்டது.மேலும் தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிகொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேலும் தற்போது கோழிகொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பல வாரங்கள் பராமரித்து வளர்த்த செடிகளில் பூத்து குலுங்கும் பூக்கள், தற்போது செடியோடு கருகும் நிலையில் உள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நூல் விலை உயர்வால் வெளிநாட்டு ஆர்டர்களை வாங்க முடியாமல் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்
    • கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது

    கரூர்:

    உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, கைக்குட்டை, மேஜை விரிப்பான், கால்மிதியடி, கையுறை போன்றவை நேர்த்தியாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், இங்கிலாந்து, ஸீவிடன், டென்மார்க் நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.4000 கோடி வரை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் 2030&ம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி ஆர்டர் என்ற இலக்குடன் செயல்பட்டாலும், தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நூல் விலையால் உற்பத்தி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

    இதுதொடர்பாக கரூரில் ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் ஆர்.ஸ்டீபன் பாபு கூறும்போது, கரூரில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஜெர்மனி பிராங்க்பர்ட் என்ற நகரில் ஜவுளி கண்காட்சி ஜுன்.21 முதல் ஜுன்.24 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கரூரில் இருந்து 33 ஏற்றுமதியாளர்களும், இந்தியாவில் இருந்து 300 ஏற்றுமதியாளர்களும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை இந்தியா சார்பில் தமிழகம், பானிபட், கேரளா, ஆந்திரா, லூதியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட ஏராளமான இறக்குமதியாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு பார்வையிட்டனர்.

    இதில் கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்தது பழைய விலையே. ஆனால் தற்போது கரூர் மாவட்டத்தில் நூல்களின் விலை 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை மூலப்பொருளான நூலின் விலை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இந்திய ஜவுளியை நாடினாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் அவர்கள் இந்திய ஜவுளி உற்பத்திக்கு கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த விலையில் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலர் உபேந்திரபிரசாத்சிங்கிடம், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ள நூல் விலை குறித்தும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 9 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைந்தது குறித்தும் தெரிவித்தோம்.

    செயலரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைக்க இருக்கும் ரூ.3500 கோடி ஆர்டர் நமக்கு கிடைக்கும். இல்லேயல் சீனாவுக்கோ, வங்கதேசத்துக்கோ சென்று விடும்.

    எனவே மத்திய ஜவுளி அமைச்சகம் நூல் விலை உயர்வை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஊக்கத் தொகையை மீண்டும் 9 சதவீதம் வழங்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
    • வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் .

    திருப்பூர்,

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம். கோழி தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். கடந்த புரட்டாசி பட்டத்தில் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை துவங்கிய போது கிலோ 20 ரூபாய்க்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முடியும் போதே, 25 ரூபாய் வரை விலை போனது.படைப்புழு தாக்குதல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.

    தற்போது உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.எதிர்பாராத விதமாக தற்பொழுது விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பே காரணம்.விவசாயிகள் சிலர் கூறுகையில், உற்பத்தி செலவு கிலோவுக்கு 15 ரூபாய் ஆகிறது. விளைச்சல் சற்று குறைந்தாலும் 20 ரூபாய் அடக்க விலை ஆகிவிடுகிறது. விற்பனை விலை சாதகமாக இல்லை.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் என்றனர்.

    ×