search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோளம்  விலை சரிவால் விவசாயிகள் கவலை
    X

     கோப்புபடம்

    மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலை

    • உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
    • வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் .

    திருப்பூர்,

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம். கோழி தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். கடந்த புரட்டாசி பட்டத்தில் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை துவங்கிய போது கிலோ 20 ரூபாய்க்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முடியும் போதே, 25 ரூபாய் வரை விலை போனது.படைப்புழு தாக்குதல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.

    தற்போது உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.எதிர்பாராத விதமாக தற்பொழுது விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பே காரணம்.விவசாயிகள் சிலர் கூறுகையில், உற்பத்தி செலவு கிலோவுக்கு 15 ரூபாய் ஆகிறது. விளைச்சல் சற்று குறைந்தாலும் 20 ரூபாய் அடக்க விலை ஆகிவிடுகிறது. விற்பனை விலை சாதகமாக இல்லை.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் என்றனர்.

    Next Story
    ×