search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் சங்கம்"

    • உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் இன்று சமா தான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் சங்கீதா, வணிக வரித்துறை ஆணை யாளர் ஜெகன் நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், ஆலோசகர் ஜெயபிரகாசம், துணை தலைவர் ஜெயகர், செயற்குழு உறுப்பினர் திருமுருகன் ஆகியோர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    சமாதான் திட்டத்தில் சேர்வதற்கான கால வரம்பான 31.3.2021 என்பதை மாற்றி 31.10.2023 வரை நிலுவையில் உள்ள ஆணைகளுக்கும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அதிக வணிகர்கள் பயனடை வார்கள். அதிக மேல்முறையீடு வழக்குகள் தீர்வு காணப்படும்.

    மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அதில் எங்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் அப்பளத்திற்கு வரி இல்லை என்ற தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

    25 கிலோவிற்கு மேல் பேக் செய்து விற்கப்படும் வெல்லத்திற்கு வரி உண்டா? என்பதை விளக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகர அனைத்து வியாபாரி கள் சங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரியில் வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம், கண், மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார். முகாமில் பொது செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பிரகாஷ் சர்மா, மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயண பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் முனியப்பன் , பொன்னேரி காவல் ஆய்வாளர் வடிவேலு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.
    • விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்க தலைவர் பீட்டர் தலைமை தாங்கி சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா,தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ராஜம், தூத்துக்குடி 3-ம் மைல் வியாபாரி சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மேலாளர் கணேச பாண்டியன்,குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத் தலைவர் முப்பிலி யன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வியாபாரி சங்கத் தலைவர் முனியசாமி, வியாபாரிகள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளான தர்மராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழை எளியவருக்கு தையல் எந்திரம், மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்,பரத்,ராஜன் ஆகியோர் வழங்கிய கண்காணிப்பு காமி ராக்களை 3 முக்கிய சந்திப்புகளில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி பொருத்தி திறந்து வைத்தார்.

    நெல்லை- தூத்துக்குடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணி நிறைவு பெறும்போது கனரக வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்படும். எனவே பழைய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை நாடார் மகாஜன மேன்சன் மினி அரங்கத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஜெயக்குமார், பிரபாகரன், சுவீட்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மோட்டார் உதிரி பாக விற்பனையாளர் சங்கம் கண்ணழகன், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, சில்வர் சிவா, கரண்சிங், கார்த்தி, காந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வணிக வரித்துறையி னரால் நடத்தப்படும் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்யவேண்டும்.

    வாகன விதி மீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்யவேண்டும்.

    மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருளின் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தை போற்றும் வகையில் 100 அடி வெண்கல சிலை அமைத்து கப்பலில் நிற்பது போல் வடிவமைத்து சென்னை, தூத்துக்குடி, குமரி கடற்கரையில் நிறுவ தமிழக அரசை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கண்ணன், பழம், ரவிச்சந்திரன், முத்துராஜ், சுருளி, கோகுலம் கணேசன், பெருமாள், ஜெயராஜ், கணேசன், செந்தில்குமார், மகளிரணி விக்டோரியா, பாக்கியலட்சுமி, கோகிலா, சித்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் குட்டி என்ற அந்தோணி ராஜ் செய்திருந்தார்.

    • ஜே.பி.நட்டாவிடம் உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.
    • 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல “அண்டர் பாஸ் ரன்வே” அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும்.

    மதுரை

    கடந்த 22-ந்தேதி மதுரை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், செயலாளர் வேல்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் கூறியிருப்பதா வது:-

    மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பல உணவு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால் வரி ஏய்ப்போர் கைகளுக்கு பல தொழில்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாரம்பரியமாக ெதாழில் செய்து கொண்டிருந்த பலர் தங்களது ெதாழிலை இழந்து அதை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்க்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு முன்பிருந்து, இந்த வரி வரவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உணவு பொருட்களை பேக் செய்வதற்கு பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த மாற்றுப்பொருளும் சந்தையில் இல்லை. பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த பொருளிலும் உணவு பொருட்களை பேக் செய்தால் வெகுவிரைவில் கெட்டுவிடும்.

    எனவே பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் தாராளமாக சந்தையில் கிடைக்கும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு அருகில் 4 வழிச்சாலை உள்ளது.

    இதனால் விமான ஓடு பாதையை நீட்டிக்க காலதாமதமாகிறது. 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல "அண்டர் பாஸ் ரன்வே" அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும். இவை உள்பட மேலும் பல கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    • 12-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வருகை.
    • வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோட்டை விநாயகர் கோயில் திடலில் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொன்னுசாமி,ஆறுமுகபெருமாள், ரங்கசாமி,அய்யாசாமி, தங்கராஜ்,ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பல்லடத்திற்கு வருகை தந்து சங்க பெயர் பலகை மற்றும் சங்க கொடியை ஏற்றி வைத்து வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

    பல்லடம் நகராட்சி கடைகள் ஏலம் விடும் போது வியாபாரிகளுக்கு தெரிவித்து ஏலம் விட வேண்டும். பல்லடத்தில் பல வணிக கடைகள் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளது. இது தமிழக அரசின் ஆணைக்கு எதிரானது ஆகும். அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் .தேவைப்படும் போது ஆங்கிலத்திலும் சேர்ந்து பெயர் பலகை வைத்துக் கொள்ளலாம். இது குறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×