search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.  

    பல்லடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

    • 12-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வருகை.
    • வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோட்டை விநாயகர் கோயில் திடலில் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொன்னுசாமி,ஆறுமுகபெருமாள், ரங்கசாமி,அய்யாசாமி, தங்கராஜ்,ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பல்லடத்திற்கு வருகை தந்து சங்க பெயர் பலகை மற்றும் சங்க கொடியை ஏற்றி வைத்து வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

    பல்லடம் நகராட்சி கடைகள் ஏலம் விடும் போது வியாபாரிகளுக்கு தெரிவித்து ஏலம் விட வேண்டும். பல்லடத்தில் பல வணிக கடைகள் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளது. இது தமிழக அரசின் ஆணைக்கு எதிரானது ஆகும். அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் .தேவைப்படும் போது ஆங்கிலத்திலும் சேர்ந்து பெயர் பலகை வைத்துக் கொள்ளலாம். இது குறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×