search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம்"

    • வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரம், ஜெய் நகர் வேட்டை பெருமாள் கோயில் தெருவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த தெருவில் உள்ள பிச்சைக்கனி என்பவருக்கு சொந்தமான வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி (வயது 45) என்பவர் தனியாக வீடு எடுத்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும்,அவருக்கு உதவியாக ராஜபாளை யத்தைச் சேர்ந்த முத்துக்கு மார் (36), கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் (46), கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பிச்சைக்க னியும் கைது செய்யப்பட்டார்.

    • பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் அவரை கைது செய்தனர்.

    பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வரும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

    பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள நா கசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகரில் விபசாரம் நடத்திய அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்டார்.
    • கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

    அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கண வருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்.
    • காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாள் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர்.

    தொடர்ந்து விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த அருட்செல்வன் மனைவி நித்யஸ்ரீ என்ற மங்கையர்கரசி(வயது 38). வாடிக்கையாளர்கள் ஏகலைவன்(42), காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேலாளர் கண்டனூரை சேர்ந்த பூமதி(36), வாடிக்கையாளர் காமராஜ்(41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமயைாளர் சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன. வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது. தற்போது 2 மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

    அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார், பெண் காவலர்களுடன் சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • சோதனையில் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் விபசாரம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சிலர் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், பெண் காவலர்களுடன் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அங்கிருந்த ஒரு பெண்ணை மீட்ட போலீசார், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மகேஸ்வரியை (வயது 32) கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களாக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

    மேலும் அங்கிருந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மாரித்துரை (24), சங்கரன்கோவிலை சேர்ந்த சுதாகர் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் பாஸ்கர் காலனி பகுதியில் விபசாரம் நடப்பதாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் சந்தேகப்படும்படி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த வெஸ்லி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலாளர் மணிகண்டன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஊழியர் காட்சன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    • வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.

    விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர்.
    • வீட்டில் நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அணைபுதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இதை ஜோசப் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் மசாஜ் சென்டர் பெயரில் அங்கு விபசாரம் நடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அங்கு நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த புரோக்கர்கள் கேரளாவை சேர்ந்த ஜித்தன் (வயது20), ஊழியர்கள் ஸ்ரீஜித் ( 21), ஸ்ரீஜேஸ் (26) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உள்பட 3 அழகிகளை போலீசார் அங்கிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • பெண் புரோக்கர் கைது
    • ரூ 11,500 பணம் பறிமுதல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக நேசமணி நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் இளம் பெண் ஒருவர் வாலிபருடன் அரைகுறை ஆடையுடன் இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் குமரி மேற்கு மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    பிடிபட்ட வாலிபர் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன்சன் (வயது 38 )என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கு புரோக்கராக செயல்பட்ட வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வி என்பவரும் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்து ரூ 11,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர் .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் மூலமாக வாலிபர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    ரூ.1000முதல் ரூ. 2000 வரை அழகியுடன் உல்லாசமாக இருப்பதற்கு பணம் கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    மேலும் வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் சிலர் வந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விபசாரம் :

    இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன.

    தப்பியோட்டம்

    போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    நடவடிக்கை

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஸ்பா என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு தினமும் இளம்பெண்கள், இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். மசாஜ் சென்டருக்குள் செல்லும் அவர்கள் அரை மணி நேரம் கழித்து திரும்புவார்கள். எனவே விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை

    ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெரு, என்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது வீட்டின் அருகே, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த குமரேசன் (27) என்பவர் குடியிருந்து வருகிறார்.

    குமரேசன் அழகப்பன் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த 25 வயது பெண்ணுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதை மணிகண்டன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த குமரேசன், பெண் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் பெண் வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் ஆட்டோ டிரைவர் புகழேந்தி (53) என்பவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    ஆத்திரம் அடைந்த 25 வயது பெண், இன்னொரு ஆட்டோவில் டி.வி.எஸ் நகருக்கு சென்றார். அங்கு ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர் புகழேந்தி மற்றும் அவரது மனைவிக்கு அடி- உதை விழுந்தது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×