search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் விஜய் (வயது 25).

    இவர் தொழில் ரீதியாக அவ்வபோது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தகவலும் விஜய்யின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 21- ந்தேதி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பரான திருவண்ணா மலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அருண் கூறியதாவது;-

    விஜயும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம், அவசர தேவைக்காக விஜயிடம் இருந்து நான் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதை என்னால் திருப்பி தர முடியவில்லை. இதனால் விஜய் என்னை பணத்தை திருப்பி கொடுக்குமாறு தொந்தரவு கொடுத்தார்.

    அவரை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றேன். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தினோம். மது போதையில் இருந்த விஜயை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த விஜய் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சென்று நடனம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 பேரை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

    இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிவகுரு, சத்யா, அகிலாண்டம், அருண் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
    • விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தம்பதியினருக்கு குழந்தை இல்லை. விக்னேஷ் தனது மனைவி யாமினியுடன் மாமனார் ஒலிச்சந்திரன் வீட்டில், வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்னேஷ், யாமினி அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனி குடித்தனம் சென்றனர்.

    விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு விக்கி மற்றும் யாமினி ஆகியோர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நண்பர் அழைப்பதாக செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    பொழுது விடிந்த பின்பும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன யாமினி மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர்.

    அப்போது சித்தேரி ரெயில்வே கேட் அருகே மாந்தோப்பில் கிணற்றின் அருகே விக்னேஷ் கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

    அவரது உடலை பார்த்து யாமினி கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவில் விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் தாகூர்கஞ்ச் காவல்நிலையை எல்லைக்கு உட்பட்ட பெகாரியா கிராமத்தில் மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் வீடு உள்ளது. இங்கு நேற்று இரவு 6 பேர் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வினய் ஸ்ரீவஸ்தவா என்பவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே வினய் ஸ்ரீவஸ்தவா சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்த தாகூர்கஞ்ச் போலீசார் விரைந்து வந்து கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    பலியான வினய் ஸ்ரீவஸ்தவா மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பராவார். கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    • கொலை சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்து உள்ள செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுப் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணம்பாளையத்தில் காலி மைதானம் ஒன்றின் அருகில் உடற் பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 வாலிபர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. உடற்பயிற்சி கூடத்துக்குள் யாரோ வருவதை அறிந்ததும் விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

    அவர்கள் சுதாரிப்பதற்குள் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 3 பேரையும் சரமாரியாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது.

    3 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த படியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இவர்களில் விஜய், ஸ்ரீகாந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜய்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் பாலகிரு்ஷணன் மற்றும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜய், ஸ்ரீகாந்த் இருவரது உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், கொலையுண்ட வாலிபர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கொலையுண்ட ஸ்ரீகாந்த், விஜய் இருவரும் சோழவரத்தை அடுத்துள்ள பெருங்காவூரை சேர்ந்தவர்கள் ஆவர். ஸ்ரீகாந்துக்கு வயது 20. விஜய்க்கு 26 வயது ஆகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது கண்ணம் பாளையத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் கொலையுண்ட ஸ்ரீகாந்துக்கும் இடையே கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டு அது பகையாக வளர்ந்துள்ளது.

    இதன் காரணமாகவே 5 பேர் கும்பல் இரட்டை கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தமிழரசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, கொலையாளிகள் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மணலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் அ.தி.மு.க. பிரமுகர் பார்த்தீபன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே செங்குன்றம் பகுதியில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிக்கும், மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் கைலாஷ் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பேச்சி என்ற இசக்கிமுத்து (23) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிக்கும், மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு மனோஜ்குமார் கிருஷ்ணன் கோவில் வடக்கு ரத வீதி தெப்பக்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பேச்சி அங்கு வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேச்சி மறைத்து வைத்திருந்த ஸ்குருடிரைவரால் கழுத்து மற்றும் நெஞ்சில் மனோஜ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து பேச்சி அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது மனோஜ்குமாரின் மற்றொரு நண்பர் அங்கு வந்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மனோஜ்குமாரை அனுமதித்தார். மனோஜ்குமார் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக அவரது நண்பர் டாக்டர்களிடம் கூறினார். மனோஜை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மனோஜ்குமாரின் உடலில் குத்து காயங்கள் இருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மனோஜ்குமார் நண்பர்களிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். தனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தனது நண்பர் மயங்கி கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினார்.

    அப்போது மனோஜ்குமாரை குத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பேச்சி என்ற இசக்கிமுத்து , மனோஜ்குமாரை குத்தியது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பேச்சி ஸ்குருடிரைவரால் மனோஜ்குமாரை குத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பேச்சியை விசாரணைக்காக வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது சகோதரர் ராஜ கோபால் கொடுத்த புகாரின் பேரில் மீது பேச்சி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பலியான மனோஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். கைது செய்யப்பட்ட பேச்சியை போலீசார் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மனோஜ்குமார் வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடசேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரசன்னாவின் வீடு புகுந்து கொலையாளிகள் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
    • பிரசன்னாவுக்கு திருமணமாகி மனைவி மகளுடன் வசித்து வந்து உள்ளார்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் புதிய அவுசிங் போர்டு பகுதியில் 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பிரசன்னா. 38 வயதான இவர் நேற்று இரவு வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று பிரசன்னாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரசன்னாவின் வீடு புகுந்து கொலையாளிகள் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. பிரசன்னா டுமிங் குப்பம் செல்வராஜ புரம் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அவரது கணவருக்கு தெரிய வந்ததால் கண்டித்துள்ளார். இருப்பினும் பிரசன்னா கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலனின் காதலியின் கணவர்தான் ஆட்களை திரட்டிக்கொண்டு வீடு புகுந்து பிரசன்னாவை கழுத்தை அறுத்து துணிச்சலாக கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இக்கொலை சம்பவம் நொச்சி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிரசன்னாவுக்கு திருமணமாகி மனைவி மகளுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது தான் அவர் கள்ளக்காதலிலும் விழுந்துள்ளார்.

    அதுவே அவரது உயிருக்கு எமனாக மாறி இருக்கிறது. தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். கொலையாளி யார்? என்று அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பிரசன்னாவின் கள்ளக்காதலியின் கணவருக்கு நெருக்கமானவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் தப்பிச் சென்ற பகுதியில் கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது22). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு அவர் மண்ணூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் பாலச்சந்திரன் அருகில் இருந்த கடையில் பிரியாணி வாங்க நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அதேகடைக்கு 3 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அவர்கள் கடையில் பிரியாணி வாங்க நின்றபோது பாலச்சந்திரனை இடித்ததாக தெரிகிறது. இதனால் பாலச்சந்திரனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது.

    இந்தமோதலில் பாலசந்திரன் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் அந்த வாலிபர்களை தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாணி கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மர்ம வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலசந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பாலச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    கொலையாளிகள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த புளியம்படு பகுதியை சேர்ந்தவர் அரி. டிரைவர் இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் பூவரசன் (வயது23). மணப்பாக்கம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பூட்டிய வீட்டுக்குள் செல்வி, அவரது மகன் பூவரசன் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மன அழுத்தத்தில்இருந்து செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரிய வந்தது. செல்வி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது உடல் எடையும் மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவித்து வந்தாக தெரிகிறது. இதற்காக செல்வி தினசரி தூக்க மாத்திரை எடுத்து வந்துள்ளார்.

    அரி தனது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள பள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரி வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மனஅழுத்தத்தில் இருந்த செல்வி அருகில் தூங்கிக கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் அடித்தார். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். பின்னர் செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சின்னதம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
    • மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    குன்றத்தூர் அடுத்த கொல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஊர் ஊராக சென்று குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையோரம் கடந்த சில மாதங்களாக கொட்டகை போட்டு தங்கி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது மகனுக்கு இன்று காதுகுத்து விழா குலதெய்வ கோவிலில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்களை நேற்று இரவே தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். இதையடுத்து உறவினரான செங்கல்பட்டு, கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த சின்னதம்பி (வயது28) மற்றும் பட்டினபாக்கத்தை சேர்ந்த பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு வந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு ராமச்சந்திரன் மது விருந்து வைத்தார். அனைவரும் மது போதையில் இருந்தபோது மொய் செய்வது தொடர்பாக சின்னத்தம்பிக்கும், மற்றவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர்இது மோதலாக மாறியது.

    ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சின்னதம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாண்டியன், விக்னேஷ் ஆகியோர் மீது கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன.

    சின்னத்தம்பி கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகாரின் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.
    • கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. மகன் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக மாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக காரியாபட்டியிலிருந்து தனது வீட்டினை சிவரக்கோட்டை சூர்யா நகருக்கு மாற்றி குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாரிச்சாமி மாட்டுப்பண்ணைக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றார். வழக்கமாக இரவு 8 மணிக்கு வீடு திரும்பிவிடுவார். ஆனால் நள்ளிரவு 12 மணி வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மாரிச்சாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மாரிச்சாமியின் மனைவி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.

    பின்னர் சந்தேகமடைந்து அவர் வேலை பார்த்து வந்த மாட்டுப்பண்ணையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இரவு நேர காவலாளி, இந்த பண்ணையில் பால்கறவை செய்யும் ஆறுமுகம் மூன்று வாலிபர்களுடன் வந்து சென்றதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பண்ணையில் உள்ளே சென்று தேடிபார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார்.

    போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிணமாக கிடந்த மாரிச்சாமியின் நெற்றியில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த கள்ளிக்குடி போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    அதில் கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த ஆறுமுகம் இதே பண்ணையில் பால் கறவை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பதும், அவருக்கும் மாரிச்சாமிக்குக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிந்தது.

    அதனால் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளை கள்ளிக்குடி போலீசார் தேடிவருகின்றனர். மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.
    • ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த யோக்கோபுரம் வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செல்வன்(வயது 32). கட்டிட தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெபக்குமாரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.

    உடனே ஜெபக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது செல்வன் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். உடனே கும்பல் அவரது பின்பக்க தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் செல்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அஜிகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வனை வெட்டிக்கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அவர்கள் 2 பேரும் சமீபத்தில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெபக்குமாரை தீர்த்துக்கட்டுவதற்காக பேரின்பராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜெபக்குமாரிடம் அந்த வழியாக வந்த அவரது நண்பரான செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.

    அந்த நேரம் அங்கு வந்த பேரின்பராஜ் மற்றும் குமரி மாவட்டம் காவல்கிணறு மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிகளை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஜெபக்குமாரை வெட்ட முயன்றதும், அதில் அவர் ஓடிவிட்டதால் செல்வனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பேரின்பராஜ், ஜெபக்குமார் ஆகியோருக்கு அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலையில் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×