search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டப்பணிகள்"

    • உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் வினீத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைக்க அரசுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    2022-2023 ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்துமுடித்தால் தான் அடுத்த பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும்.

    உடுமலைப்பேட்டை நகராட்சியின் சார்பாக வடிகால் அமைக்கும் பணிகளை காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்கவும், மேலும், மின்சார வாரியத்தின் சார்பில்பழுதடைந்த மின்கம்பிகளை எல்லாம் மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின்சார்பில் பழுதடைந்த சாலைகளை எல்லாம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோடை காலமாக இருப்பதால் ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்தவித தடைகளும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் . மேலும் வருகின்ற மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை சமர்பித்தவுடன்தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு வருகை புரிந்து நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்குள் நமது மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மு.மத்தின், மண்டலஇணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) வி.ராஜன், உடுமலைப்பேட்டை நகராட்சிஆணையாளர் சத்யநாதன், மண்டலப்பொறியாளர் பாலச்சந்திரன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும்அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்தல் பணி மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி யில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் காளான் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கென ரூ.1 லட்சம் மானியத்தொகை பெற்று சிப்பி காளான் பண்ணை வைத்துள்ள பயனாளியை நேரில் சந்தித்து, திட்டச் செயல் பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்து வதற்கென துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறும்படி பயனாளியிடம் கேட்டுக்கொண்டார்.

    மேலும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் செயல்பாடு கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தரமான முறையில் விரைந்து கட்டிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சிவகங்கையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்கென சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் வருகை புரிந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 பிரசவங்கள் நடை பெற்று, தாய் சேய் நலன் காக்கப்பட்டு வருகிறது.

    தற்போது செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையக் கட்டிடத்தை தொடர்ந்து, அதனை விரிவுப்படுத்திடும் நோக்கில் அவ்வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாய் சேய் நலன் கட்டிடம் கட்டுவதற்கென இடம் தேர்வு செய்தல் பணி தொடர்பாகவும் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சை மைய கட்டிடத்திற்கான இடங்கள் தேர்வு செய்தல் பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன் (பொது சுகாதாரம்), அழகுமலை (தோட்டக் கலைத்துறை), சிவகங்கை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்படும் என மேயர் மகேஷ் தகவல்
    • உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் பேசியதாவது:-

    வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு பிரசவம் பார்க்கப்பட்டது. அது தற்போது தொல்ல விளைக்கு மாற்றப் பட்டுள்ளது. அதனால் வட்டவிளையில் தொடர்ந்து பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் பெண்கள் வந்து செல்வதற்கு பேருந்து இயக்க வேண்டும்.

    மாநகர பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வரு கிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும் சரி செய்வது இல்லை. தெருக்களில் தண்ணீர் ஓடும் நிலை இருந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வலம்புரி குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 50-வது வார்டு பகுதியில் இரண்டு மாதங்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் நிறைய உள்ளது. அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்க மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும். களியங்காடு, பனைவிளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-

    மின்வாரியத்திற்கு ரூ.5 கோடி பாக்கி உள்ளது. அதனால் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கு டெபாசிட் கொடுக்க வேண்டி உள்ளது. இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் ரூ.16 கோடி செலவில் தெரு விளக்குகள் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேலும் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் மின்வாரியம் கூறி வருகிறது. ஆனால் ஆன்லைனில் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் காசோலை மற்றும் டி.டி. கொடுத்து சரி செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

    குடிநீர் குழாய்களை சரி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும். தற்போது குப்பையை அகற்றும் பணியில் 2 இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. இதனை 5 எந்திரங்களாக மாற்றுவதற்கு புதிய டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்து நல்ல நிலைமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இது தொடர்பாக வருகிற 8-ந்தேதி ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டு வார்டுகளில் தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநக ராட்சி பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு என்னென்ன பணிகள் செய்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற் காக ரூ.267.50 கோடிக்கு எஸ்டிமேட் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த நிதி கிடைத்தால் அனைத்து பணிகளும் செய்து முடிக் கப்படும்.

    ஆய்வு செய்த அறிக்கை மற்றும் எஸ்டிமேட்டை குமரிக்கு வருகிற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது பல்வேறு திட்டங்களுக்காக நிதிகள் வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார். கூட்டத்தில் மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் அனிலா சுகுமாரன், டி.ஆர். செல்வம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அவினாசி:

    அவிநாசி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சி எம்.ஆா்.பி. வீதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடா்ந்து, அவிநாசி காந்திபுரம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை மற்றும் அம்மபாளையம், ராக்கியபாளையம், அவிநாசி, செம்யநல்லூா், நம்பியாம்பாளையம், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆ.ராசா தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் 33 கிராம அருந்ததியா் மக்களுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் மண்டபம் அமைத்துத் தருமாறு அவிநாசி வட்ட அருந்ததியா் சமூக மட அறக்கட்டளையினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து, அந்த இடத்தை பாா்வையிட்டு விரைவில் மண்டபம் அமைத்து தரப்படும் என்றாா்.

    இந்நிகழ்ச்சியில், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, குமாா்(திருமுருகன்பூண்டி), செயல் அலுவலா் செந்தில் குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.
    • ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார் பில், ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கணியாகுளம் ஊராட்சியில் அழகன் கோணம் இசக்கியம்மன் சாலையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப் பில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியினை பார் வையிட்டதோடு, பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.

    மேலும், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல் வாய்மொழி தாணுமாலை யான்புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் கூடுதலாக இரண்டு வகுப்ப றைகள் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, மாதவலாயம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், வெள் ளமடம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள சமையலறை கட் டிடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, ஆரல்வாய்மொழி பேரூ ராட்சிக்குட்பட்ட பெரு மாள்புரம் அரசு தொடக் கப்பள்ளியில் பழுதடைந்த சமையலறை கட்டிடமும் பார்வையிடப்பட்டது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளி யில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற் கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, வல்லன்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.98.55 லட்சம் மதிப்பில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத் தினையும், இளங்கடை வடக்கு அரசு தொடக் கப்பள்ளியில் ரூ.68.70 லட் சம் மதிப்பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை யும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதோடு, பணியினை விரைந்து முடித்து மாண வர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரதுறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது.

    மேலும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகரில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.57 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டிருந்த பணிகள் என மொத்தம் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து வளர்ச்சித்திட் டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண் டுவர வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, செயற் பொறியாளர் ஏழிசை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
    • அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவிநாசி : 

    அவிநாசி, சேவூா், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் , வடுகபாளையம், சின்னேரிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் குடிநீா்த் தொட்டி, சூளை பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவுநீா் வடிகால், ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடா்ந்து திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு, பெரியாயிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தாா்.இதையடுத்து ஆ.ராசா முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயகுமாா் (தத்தனூா்), சுப்பிரமணியம் (வடுகபாளையம்) உள்ளிட்ட 50 போ் தி.மு.க.வில் இணைந்தனா்.

    இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தாா். திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் குமாா், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தார்.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவ லா்களை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை ஆணையா் லால்வேனா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப்பணிகள் தொடா்பாக அவ்வப்போது ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா், கலெக்டருடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமாிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மைத்துறையின் சார்பில் ஆலங்குளம் ஊராட்சியில், விவசாயியை சந்தித்து, தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை விவசாயம் குறித்து கலந்துரையாடினார். ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளா்ச்சி இயக்கத்தின் கீழ் இயற்கை உரத் தொகுப்பையும் வழங்கினார்.

    சிவகங்கை நகராட்சிப் பகுதியில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நம்ம டாய்லெட் - நகராட்சி பொது கழிப்பறை கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கற்றல் முறை குறித்தும் கலந்துரையாடினார்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில், பொியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பையூர் பிள்ளைவயல் நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்து, பொதுமக்க ளுக்கு வழங்க ப்படும் குடிமைப்பொ ருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை குறித்தும், செயல்பாடுகள் தொடா்பாகவும் ஆய்வு செய்தார்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • மத்திய கூட்டுறவு வங்கியின் நாகக்கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தா
    • திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட திருநந்திகரையில் ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகள் மற்றும் சுருளகோடு ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி காலையில் குலசேகரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நாகக்கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். பின்னர் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை பார்வையிட்டு அதனை சீரமைப்பது குறித்து பொதுப்பணிதுறை நீராதாரப்பிரிவு அலுவலர்களிடம் பேசினார்.

    தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட திருநந்திகரையில் ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் சூரியகோடு-திட்டவிளை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழ்விலவூர்கோணம் வேங்கோட்டு குளம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து பக்கச்சுவர் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். பிணந்தோட்டில் இ-சேவை மையத்தையும், மாஞ்சக்கோணத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில், மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், பொதுப்பணித்துறை உட் கோட்ட என்ஜினீயர் சுகந்தா, உதவி என்ஜினீயர் பிரவீணா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ஆர். ராஜா, திற்பரப்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ஜாண் எபனேசர், பொன்மனை பேரூர் தி.மு.க. செயலாளர் சாம் பென்னட் சதீஸ், மாவட்ட பிரதிநிதி பொன் ஜேம்ஸ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினித்ஜெரால்ட், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,

    கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×