search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆய்வு
    X

    குமரியில் ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆய்வு

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.
    • ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார் பில், ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கணியாகுளம் ஊராட்சியில் அழகன் கோணம் இசக்கியம்மன் சாலையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப் பில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியினை பார் வையிட்டதோடு, பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.

    மேலும், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல் வாய்மொழி தாணுமாலை யான்புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் கூடுதலாக இரண்டு வகுப்ப றைகள் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, மாதவலாயம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், வெள் ளமடம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள சமையலறை கட் டிடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, ஆரல்வாய்மொழி பேரூ ராட்சிக்குட்பட்ட பெரு மாள்புரம் அரசு தொடக் கப்பள்ளியில் பழுதடைந்த சமையலறை கட்டிடமும் பார்வையிடப்பட்டது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளி யில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற் கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, வல்லன்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.98.55 லட்சம் மதிப்பில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத் தினையும், இளங்கடை வடக்கு அரசு தொடக் கப்பள்ளியில் ரூ.68.70 லட் சம் மதிப்பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை யும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதோடு, பணியினை விரைந்து முடித்து மாண வர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரதுறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது.

    மேலும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகரில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.57 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டிருந்த பணிகள் என மொத்தம் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து வளர்ச்சித்திட் டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண் டுவர வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, செயற் பொறியாளர் ஏழிசை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×