search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டப்பணிகள்"

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்.
    • முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.76 லட்சத்து 30 ஆயிரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி மொய்யாண்டபாளையம் பகுதியில் ரூ.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திலும், தட்டான்குட்டை, ஜே.நகர் பகுதியில்22 லட்சத்து 80 ஆயிரத்திலும், புதிய தார்சாலை, அப்பியாபாளையம் ரங்காநகர் பகுதியில் ரூ.21 லட்சத்திலும்புதிய தார்சாலை, எஸ்.எஸ்.நகர் ஆரம்பப்பள்ளி அருகில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் சிவசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி, நிர்வாகி ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு சித்ரா, சொசைட்டி முன்னாள் தலைவர் கிட்டுசாமி, வார்டு உறுப்பினர்கள் முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதன்படி பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கதொட்டியையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், செம்மிபாளையம் பகுதியில்ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தையும், ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தையும், இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் ரூ.52.53 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளையும்,இதேபோல கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகள் எனமொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக கரடிவாவி ஊராட்சியில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேசிய திட்ட விளக்க பிரச்சார ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    . இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷிலா புண்ணியமூர்த்தி, கல்விக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி , மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்,மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பி்னனர் கலெக்டர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் தொடர்பாகவும்இ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும்இ நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகஇ தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அன்னியேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிக்குளம் பகுதியில் ரூ.3060 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டும் பணிகள் தொடர்பாகவும், ரூ.1686.37 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணிகளை, சிவகங்கையில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் அங்குள்ள நடைபெற்ற ஏலம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணி, ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் மறவமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஊரணி, மேலமருங்கூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆகியன தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காரைக்குடியில் நகராட்சிஇ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள்இ மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணிகளையும்இ கழனிவாசலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநிலக்கோட்டம்) பாரதிதாசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கரட்டுப்பாளை யம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி, மேட்டு நாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், கட்டப்பட்டு வருகிறது.

    லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.52 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெருவில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் மற்றும் மண க்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வளர்ச்சி திட்ட ப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பு றங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி மற்றும் அலு வலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட ப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாளவாடி தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று பார்வை யிட்டு அங்கு பரா மரிக்கப்பட்டு வரும் பதி வேடுகள் மற்றும் அலுவலக கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதே போல் அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையம், கணினி அறை, பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தாளவாடி மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தினை பார்வையிட்டு அங்கு செயல்படும் பல் மருத்துவ பிரிவு மற்றும் ஆய்வகம், சித்த மருத்துவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    தொடர்ந்து கலெக்டர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் எல்லக்கட்டை, பாரதிபுரம் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணி, கும்மட புரம் சிவம்மா தோட்டம் அருகே ரூ.20.88 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள தையும், இக்கலூர் ஊராட்சி, சிக்கள்ளி பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணி, ஓசூர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு விற்பனை குழு, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன், குளிர்பத னக்கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் அளவிலான தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, திகினாரை முதல் சோழகர் ரெட்டி வரை ரூ.48.90 லட்சம் மதிப்பீட்டில் 2.8 கி.மீட்டர் நீளம் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் மல்கொத்திபுரம் பகுதியில் விளைநிலங்களில் யானை போகாமல் பாது காப்ப தற்காக அகழியில் அமைக்க ப்பட்டுள்ள சூரிய மின்சக்தி யுடன் கூடிய மின்வேலியை பார்வையிட்டார்.

    மேலும், திகினாரை பகுதியில் மனோஜ் குமார் என்ற விவசாயி தனது 30 ஏக்கர் நிலத்தில் ரோஸ்மேரி என்ற செடி வகை பயிரிட்டுள்ளதை பார்வை யிட்டார். இந்த ரோஸ்மேரி செடி வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதால் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த செடி குறித்து விபரங்களை விவசாயிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து தலமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உண்டு உறை விட உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு அங்கு ஆசிரியர் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கணக்கு பாடம் கற்பிப்பதை மாணவர்களோடு தானும் அமர்ந்து பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர், ஆசனூர் வனக்கோட்டம் (சத்திய மங்கலம் புலிகள் காப்பகம்) தேவேந்திர குமார் மீனா, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் மனோ கரன், அர்த்தநாரீஸ்வரன், தாசில்தார் ரவிசங்கர், உதவி பொறியாளர் பாண்டிய ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
    • பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீமநகரி, மாதவாலயம், செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமநகரி ஊராட்சிக்குட்பட்ட அய்யன் கால் ஓடை பகுதியில் ரூ.9.50 மதிப்பில் புதிதாக போடப்பட்ட சாலைப்பணியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மகாத்மா நகர் பகுதியில் இணையதளம் வழியாக மின்னணுவியல் மின்பொ ருள் கருவி பொருத்தப்பட்டுள்ளதையும், பீமநகரி அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரினை சுத்திகரிக்கும் பொடியினை கலப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட் டது.

    பீமநகரி ஊராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விளம்பரப்பதாகை அமைக்கப்பட்டிருந்ததையும் பார்வையிடப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வேம்பத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணியினை பார்வையிடப்பட்டது.

    மாதவாலயம் ஊராட்சிக்குட்பட்ட மாதவலாயம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.29 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையலறை, ரூ.9.85 லட்சம் மதிப்பில் நம்பியான்குளம் தூர்வாரும் பணி பார்வையிடப்பட்டது. மேலும், ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் கால்வாய் அருகில் கழிவுநீர் செல்வதற்கான ஓடை அமைக்கும் பணி, 15-வது நிதி மானிய திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார கட்டிட பணியினையும், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாறை பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறையிலிருந்து அரசு ரப்பர் கழகம் மற்றும் லேபர் காலனிக்கு செல்வதற்கான பாலப்பணி என மொத்தம் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையம் அருகில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பூமாலை வணிக வளாகத்தினை சீரமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புனிதம், கனகபாய், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிராங்கிளின் (தடிக்காரன்கோணம்), சஜிதா சுப்பிரமணியம் (பீமநகரி), கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூர்) உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
    • உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சி யில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறு கிறீர்களா? என கேட்டறிந்த துடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கூறினார்.

    ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்க ளிடம் தங்களுக்கு தேவை யான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? எனவும், அதேபோல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? மற்றும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்ப டுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் கொடுமுடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வள்ளியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 1.40 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி யினையும் மற்றும் நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரிஆற்றில் இருந்து நீர் செல்வதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிக்கு குடிநீர் தேவைகள் குறித்தும் தொடர்புடைய அலு வலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நூலகம் கட்டுவத ற்கான இடம் மற்றும் ஆவுடையார்பாறை பகுதி யில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலை யத்தினை அப்பு றப்படுத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தி னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், நெல் தரிசில் எண்ணெய் வித்து பரப்பினை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் ரூ.42,000 மானிய உதவியுடன் ரோட்ட வேட்டர் வழங்கப்பட்டு ள்ளதையும் மற்றும் வடிவுள்ள மங்களம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பல்லாண்டுநறுமணபயிர் பரப்புவிரிவாக்கம் திட்டத்தின் கீழ் ரூ.20,000 மானியஉதவியுடன் மிளகு பயிரிடப்பட்டுள்ளதையும் மற்றும் இயற்கை முறையில் பாக்கு மரத்தில் வெற்றிலை கொடி பயிரிடப்பட்டுள்ள தையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஆவுடை யார்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நூலக கட்டிடம் புணரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், ஆவுடையார்பாறைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையலறை பராமரிப்பு பணியினையும், ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் ஆவுடையார்பாறை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும்,

    ஆவுடையார் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் நாகமநாயக்கன் பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் தென்னை மரத்திற்கு வாய்க்கால் வரப்புகட்டும் பணியினையும் (தனிநபர்) நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரை வாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி, கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், உமா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய செய ற்பொறியாளர் வீரராஜன், உதவிபொறியளார் குருசாமி, ஊராட்சி ஒன்றிய உதவிபொறியாளர் விஜய ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஏ.டி காலனியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பொங்குபாளையம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, காளம்பாளையம் என்.எஸ்.பி.ராஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லல் யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
    • 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 லட்சம் மதிப்பீட்டில் 3 வளர்ச்சித் திட்ட பணிகள் முடிவுற்றன. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொள்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டுகிறது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிதாக சமுதாய கூடத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து எடுத்துரைத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் உடன டியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் லதா தேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லட்சு மணன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முத்தழகு, சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோ ஜாதேவி குமார் (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்திய கலா(பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செழியன், அழகு மீனாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×