search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை"

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்
    • சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    இந்த சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்குறைந்த வண்ணமாக உள்ளன. இருப்பினும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணி கள் படகுத்து றையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அனு மதிக் கப்பட வில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்தவரே பார்வையிட்டு சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக் கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் விடுமுறை இல்லாத இன்றும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். சபரிமலை சீசனையொட்டி கடந்த 3 மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர்.

    இதில் 7 லட்சம் 17ஆயிரத்து 591 சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சபரிமலை சீசனை யொட்டி கடந்த நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 891 பேரும் டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம் ரூ.10கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலக பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது காம்பவுண்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.

    மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கட்சி அலுவலகமும் புதுப்பிக்கப்பட உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலகம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மார்ச் முதல் வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வருகிற 30-ந்தேதி நேரில் சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான புக்லேட் மற்றும் கலைஞர் சிலை அமைப்பதற்கான புக் லைட்டை வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அதிகாரிகள் வரவேற்றினர்.

    கன்னியாகுமரி:

    அரியானா மாநில சட்டமன்ற மனுக்கள் குழு இன்று காலை கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த சட்டமன்ற குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றினர்.

    பின்னர் இந்த எம். எல். ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

    அங்குள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுத்ரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன்சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

    • விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
    • சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெரு மாள் கோவில் ஒன்றாகும்.

    கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் கேராளவில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று விடுமுறை நாளையொட்டி பக்தர்கள் காலையில் இருந்தே வருகை தந்தார்கள். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்கள் ஒற்றை கால்மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அன்னதானத்தை சுமார் 300 நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
    • இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு உறுதி செய்திட வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற் கொள்வது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக் டர் அரவிந்த் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    கன்னியாகுமரிக்கு நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. எனவே அய்யப்ப பக்தர்க ளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    மேலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக இடங்களை ஏற்பாடு செய்வதோடு, இரவு நேரங் களில் எந்தவித பயமும் இல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மின்சாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் கன்னியா குமரியை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புதுறை உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள் வதோடு, பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் தவிர்ப்ப தற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜய லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கட்டுப்பாடுடன் வரவேற்பது அவசியம்.

    நாகர்கோவில்:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முட்டத்தில் விழா நடைபெற உள்ளது. இந்த மீனவர் தினவிழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகை யையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய வர வேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் எப்.எம்.ராஜ ரத்தினம் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். பின்னர்

    21-ந்தேதி காலை அங்கு திரைப்பட விழாவை தொடக்கி வைத்து விட்டு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு மதிய உணவை முடித்த பிறகு முட்டத்தில் நடைபெறும் மீனவர் தினவிழாவில் கலந்து கொள்கிறார்.

    நான் மாவட்ட செயலா ளராக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளேன். அதோடு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். எனவே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்க வேண்டும். கடந்த 7.9.2022 அன்று ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது காவல்கிணறு சந்திப்பில் கொடுத்த வரவேற்பை போலவும், அதை விட எழுச்சியுடனும் வரவேற்க வேண்டும்.

    இதுவரை குமரி மாவட்டம் பார்த்திடாத வரவேற்பை அவருக்கு அளிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசல் இல்லா மல் கட்டுப்பாடுடன் வர வேற்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில், குமரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக யார் அறி விக்கப்பட்டாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண் டும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் லிவிங் ஸ்டன், சுரேந்திரகுமார், பாபு, மதியழகன், பிராங்கி ளின், ரமேஷ்பாபு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், துணைச் செய லாளர்கள் பூதலிங்கம், சோமு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட்ட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    • கடற்கரை வெறிச்சோடியது
    • மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் வருகை அதிகமாக இருக்கும்.

    தற்போது சீசன் இல்லாத இந்த நேரத்திலும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இருப்பினும் நாளொன்றுக்கு சராசரி 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை. இதனால் அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது.

    • 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி ஜெனரல் வி.கே.சிங் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் குமரி மாவட்ட விதான் சபா பிரகாஷ் யோஜனா கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார். நாளை காலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கிறார். அதன் பிறகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடுகிறார்.

    10 மணிக்கு கார் மூலம் நாகர்கோவில் புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11 மணி முதல் 12 -30 மணி வரை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பிறகு மாலை 3-30 மணிக்கு தக்கலை புறப்பட்டு செல்கிறார். அங்கு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அதன்பிறகு மீண்டும் கன்னியாகுமரி வருகிறார்.நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணிக்கு அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார்.

    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

    இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×