search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி"

    • வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது.

    வசாய்:

    மிராபயந்தர் மாநகராட்சியில் வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தானே மாவட்டம் மிராபயந்தர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சொத்து வரி நகரில் மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 977 பேரிடம் ரூ.227 கோடியே 80 லட்சம் வரையில் இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ரூ.155 கோடியே 49 லட்சம் அளவிற்கு வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதி ரூ.72 கோடியே 31 லட்சம் அளவில் பாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருபவர்கள் மீது மாநகராட்சி கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    இதன்பேரில் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது. இதன்படி 262 குடியிருப்புவாசிகளின் சொத்துகள் பறிமுதல் செய்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்த சொத்துக்களை ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்கப்படும். நடப்பு ஆண்டில் வரி வசூல் 68 சதவீதமாகவும், நிலுவை தொகையை வசூலிக்க கமிஷனர் அறிவுறுத்தலின்படி சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக என மாநகராட்சி துணை கமிஷனர் சஞ்சய் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

    வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம்
    • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோபர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி வரி வசூல் செய்வதில் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    இதனால் பல்வேறு நலத்திட்டங்கள் மாநக ராட்சிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களை கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல மையங்கள் திறக்கப்பட்டு விடுமுறை நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் உத்தர விட்டுள்ளார். நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோடு கோணம் பகுதியில் ராதா கிருஷ்ணன் என்பவர் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளார். அதனை தொடர்ந்து ஆணையரின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, ஆல்டிரின், சேகர், பிட்டர் ஜஸ்டின், தேவகுமார் மற்றும் உதவி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள், ராதா கிருஷ்ணன் வீட்டிற்கு செல் லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    மாநகராட்சிக்கு ஆண்டிற்கு இரு முறை வரி செலுத்தும் வகையில் மாதங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோ பர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

    இதில் முதல் அரை யாண்டில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள்ளும் 2-வது அரையாண்டில் அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் கண்டிப்பாக வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்த னர்.

    • பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

    ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
    • நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தப்பட்டது
    • விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வரவேண்டும் என பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி அறிவுறுத்தினார். பெரம்பலூரில் வருமான வரி துறை அலுவலகம் சார்பில் முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்

    வருமானவரி செலு த்துபவர்கள் நான்கு தவணைக ளில் செலுத்த வேண்டிய நடப்பாண்டிற்குண்டான வரியில் 75 சதவீதம் மூன்றாவது தவணை வரியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். அப்படி செலுத்த தவறனால் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.

    திருச்சி வருமான வரி அதிகாரி கண்ணன் வருமானவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரம்பலூரி வருமானவரி அதிகாரி உமாமகேஸ்வரி, மாவட்ட வணிகர் சங்க தலைவர் சண்முக நாதன் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட வருமான வரி அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் வருமான வரி ஆய்வாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
    • காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காங்கயம் : 

    வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

    அவைத்தலைவர் ஜெயபால், நகரதலைவர் நசீர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகரசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மாதாமாதம் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி கொண்டு போவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து அரிசி, பால் போன்றவற்றிற்கு வரியை குறைக்க செய்ய வேண்டும்.

    சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது கடமை ஆகும்.

    தஞ்சை வணிகர் சங்கபேரவையின் சார்பில் சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு வரும் வருகிற 29-ம் தேதி தஞ்சையின் 52 வணிகர் சங்க வட்ட செயலாளர்களும் சென்று ஆர்ப்பாட்டம் செய்திடுவது.

    இதற்கான ஏற்பாடுகளை செய்திட மாநிலநிர்வாகிகளை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்ஆத்மநாதன், சுந்தரமூர்த்தி, காசிநாதன், சபிக்முகமது, பிரகாஷ், துணைச் செயலாளர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரசெயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
    • பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.

    தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • செயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக வரியினங்களை செலுத்தி பயனடையலாம்.
    • தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் அறிவிப்பு.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். இதற்காக தயாரிக்கப்பட்டசெயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக தாராபுரம் நகராட்சியைத் தோ்வு செய்து, மேற்கண்ட வரியினங்களை செலுத்தி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரிகளை உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு வதைக்கிறது என்று தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
    • எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட அ தி.மு.க. காந்தி மார்க்கெட் பகுதி கழகம் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில், அவுலியாக்கள் மூலம் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.

    இதில், முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளரும், ஆவின் தலைவருமான கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், துணைச்செயலாளர் வனிதா, மீனவரணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, இன்ஜினியர் சிராஜுதீன், நத்தர்ஷா, தற்காகாஜா, பொன். அகிலாண்டம், காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், கன்னியப்பன், ஐ.டி.விங்க் பாபு. அஸ்ரப் ஜான். கேபிள் முஸ்தபா, ஜெயக்குமார், வி.எல்.சீனிவாசன், வண்ணாரப்பேட்டை ராஜன், ராஜசேகர், மாணவரணி குமார்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பின்னர் தமிழ் மகன் உசேன் நிருபர்களிடம் கூறும்போது,

    எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    33 வது மாவட்டமாக திருச்சி மாநகர மாவட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.

    சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்து எவ்வளவோ நல்ல பல திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தந்திருக்கிறார்கள். அவர்களின் வழியில் எடப்பாடி கே. பழனிச்சாமியும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை தி.மு.க. அரசு வாட்டி வதைக்கிறது. இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்படி சட்டப்பேரவை தேர்தல் வந்தால் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் சிறுபான்மையினர் சமுதாயம் யாருக்கு ஆதரவை தருகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். என்றார்.

    • கரூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • ரூ.10 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

    கரூர்

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, மினி பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வணிக நிறுவனம் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கரூர் மினி பஸ் நிலையம் அருகே உள்ள 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை, கரூர் பஸ் நிலையத்தில் 8 கடைகள் என மொத்தம் 11 கடைக்காரர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு கடைக்கு தலா ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து 11 கடைக்காரர்களுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பணத்தையும் செலுத்தவில்லையாம்.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கும் சீல் வைப்பதற்காக மாநகராட்சி ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர்.

    அப்போது கடைகளின் உரிமையாளர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கரூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்ததாத 11 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் கரூர் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×