search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிகர்கள் முன் கூட்டியே  வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தல்
    X

    வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தல்

    • வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தப்பட்டது
    • விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வரவேண்டும் என பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி அறிவுறுத்தினார். பெரம்பலூரில் வருமான வரி துறை அலுவலகம் சார்பில் முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்

    வருமானவரி செலு த்துபவர்கள் நான்கு தவணைக ளில் செலுத்த வேண்டிய நடப்பாண்டிற்குண்டான வரியில் 75 சதவீதம் மூன்றாவது தவணை வரியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். அப்படி செலுத்த தவறனால் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.

    திருச்சி வருமான வரி அதிகாரி கண்ணன் வருமானவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரம்பலூரி வருமானவரி அதிகாரி உமாமகேஸ்வரி, மாவட்ட வணிகர் சங்க தலைவர் சண்முக நாதன் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட வருமான வரி அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் வருமான வரி ஆய்வாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×