search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்"

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர்.

    தக்கலை :

    தக்கலை திட்டிமேல்கோணம் அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் அருண் என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முளகுமூடு பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு டீ கடையில் இருவரும் டீ குடித்தனர்.

    அப்போது அங்கு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ராஜா என்ற சுரேஷ்குமார் வந்தார். அவருக்கும் அருணுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை எட்வின் ராபர்ட் தலையிட்டு சமரசம் செய்து வைத்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை எட்வின் ராபர்ட், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜா தனது நண்பர்கள் ஜெகன், ஜெரிக் ஆகியோருடன் வந்துள்ளார். அவர்கள், எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாமியார் மடம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசில், எட்வின் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர் கடந்த 2018-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வேல்முருகன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். முன்விரோதம் காரணமாக வேல்முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிருபாவை வெட்டினார்.
    • ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 35) இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவ ருக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆன நிலையில் கிருபா(30) என்ற மனைவியும் 4 மற்றும் 2வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்தநிலையில் ராணுவ வீரரான வீரமணி ராணுவ பணிக்கு சென்றுவிட்டு விடுமுறையில் ஊர் வந்து செல்வதுண்டு.

    இந்தநிலையில் கடந்த ஒரு மதத்திற்கு முன்பு விடுமுறை வந்திருந்து வீட்டில் இருந்த ராணுவ வீரர் வீரமணிக்கும் அவரது மனைவி கிருபாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிரு பாவை சரமாரியாக வெட்டினார்.

    அப்போது இதனை தடுத்த கிருபாவிற்கு இருகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உறவினர்கள் கிருபாவை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருபா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
    • அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    நைஜர்:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.

    இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500 பேரை பிரான்ஸ் நைஜரில் நிலை நிறுத்தி இருந்தது. பிரான்சுக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் முகமது பாசும் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் திரும்பியது. அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.

    இந்நிலையில் அந்த நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 1500 வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
    • இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இரணியல் :

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த ஒரு நபரை நீதிமன்றம் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தலக்குளம், கள்ளியங்காடு பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. விசாரணையில் அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (வயது 42) என்பதும், திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் பிரபல துணிக்கடையின் பின்புறம் நடந்த செயின் பறிப்பு வழக்கில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட விபரம் தெரியவந்தது. அவரை இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • மணிப்பூரில் விடுமுறையில் ராணுவ வீரர் வீட்டுக்கு வந்தார்.
    • அவரை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்திச் சென்றனர். அப்போது, அவரது 10 வயது மகன் இதனைப் பார்த்துள்ளான்.

    இதுதொடர்பாக கோமின் மகன் போலீசாரிடம் கூறுகையில், 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் முகப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கோமின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கோமின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். அவரது தலையில் துப்பாக்கி குண்டு காயம் ஒன்று காணப்பட்டது.

    ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
    • ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    • ராணுவம் சகித்துக் கொள்ளாது என்பதால், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை.
    • ராணுவ நீதிமன்றத்தால் ராணுவ வீரருக்கு வழங்கப்படும் தண்டனை, தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும்.

    பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசியத் தகவலை அனுப்பியதாக பிடிபட்ட ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை விதித்து அதிகாரி ஒருவர் தலைமையில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    வடக்கு எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேசிய தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பிடிபட்ட ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் 10 ஆண்டு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியத் தலைநகரில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஆணையத்தில் பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த நாயக் அபித் என்ற அபித் ஹுசைனுடன் ராணுவ வீரர் தொடர்பில் இருந்தார்.

    எதிரி உளவு நிறுவனத்திற்கு ராணுவ வீரர் வழங்கிய ஆவணங்களின் பட்டியலில், அவர் நிலைநிறுத்தப்பட்ட அமைப்பின் பாதுகாப்புப் பணிப் பட்டியலும், அவரது சொந்த உருவாக்கத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

    கொரோனா லாக்டவுனைக் கருத்தில் கொண்டு வாகனங்களின் நகர்வுப் பட்டியல் மற்றும் அதனுடன் வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் ரானுவ வீரர் அனுப்ப முயன்றுள்ளார்.

    இதுபோன்ற செயல்களை ராணுவம் சகித்துக் கொள்ளாது என்பதால், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், ராணுவ நீதிமன்றத்தால் ராணுவ வீரருக்கு வழங்கப்படும் தண்டனை, தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் ரெகுவரன் நாயர், ஓய்வு பெற்றவர் ராணுவ வீரர். இவரது மகன் திருமணம் முடிந்து கொடைக்கானலில் வசித்து வருகிறார்.

    இதனால் ரெகுவரன் நாயரும் அவருடைய மனைவியும் வன்னியூரில் குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15-ந் தேதி மகனை பார்ப்பதற்காக கொடைக் கானல் சென்றனர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அவர்கள் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.22 ஆயிரம் மற்றும் 1½ பவன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த யாரோ மர்ம நபர்கள் திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ரெகுவரன் நாயர், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து நகை பணம் திருடிய சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது.
    • சகோதரரின் பராமரிப்பில் உள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த மாணவி, தற்போது சகோதர ரின் பராமரிப்பில் உள்ளார்.

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (வயது 44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசா ரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு
    • பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மண லிக்கரை இலங்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் நாயர் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலையில் ரத்த வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசேதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உடலை உறவினர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முன்னாள் ராணுவ வீரர் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என டாக்டரிடம் கூறியுள்ளனர்.

    அதற்கு டாக்டர் போலீஸ் வந்தால் தான் எங்களால் உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப முடியும் என கூறினார். இதனால் உறவினர்கள் கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் வராததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது எங்கள் பகுதியில் நடக்காததால் நாங்கள் வரமுடியாது என குலசேகரம் போலீசார் தெரிவித்தனர். இப்படியாக இறந்த ராணுவ வீரர் உடல் புறநோயாளிகள் பகுதியில் திறந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தது.

    இதை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொற்றிகோடு போலீசார் வந்து உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் இவரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×