search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளைச்சாவு"

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • சப்-இன்ஸ்பெக்டர் ஆவான் என்று நினைத்தவன் அசைவின்றி கிடப்பதாக தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
    • இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    உள்ளகரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் சொந்த ஊர் பீகார் மாநிலம். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இளங்கோவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வேதனை அடைந்தனர்.

    நேற்று முன்தினம் இளங்கோவனுக்கு பிறந்தநாள். எனவே அவர் மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றிக்கொண்டு ஒன்றாக சுற்றினார். பின்னர் அவர்கள் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காதலனிடம் மாணவி தெரிவித்தார்.

    எனவே ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்று கருதிய இருவரும் கட்டி பிடித்தபடி மின்சார ரெயில்முன் பாய்ந்தனர். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் பலத்த காயம் அடைந்தார்.

    மாம்பலம் ரெயில்வே போலீசார் இளங்கோவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மாணவர் இளங்கோவனை அவரது தந்தை குமார், தாயார் லதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். குமார் கட்டிட தொழிலாளி ஆவார். லதா வீட்டு வேலை செய்து வருகிறார்.

    மகனின் நிலை பற்றி குமார் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். அன்று கல்லூரி விடுமுறை என்பதால் காலையிலேயே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான். வீட்டில் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வைத்திருந்தோம். இரவு வரை அவன் வீட்டுக்கு வரவில்லை.

    எனவே கேக் வெட்டுவதற்காக இரவு 9 மணிக்கு அவனுக்கு போன் செய்து அழைத்தேன். அப்போது போலீசார் தான் போனை எடுத்து பேசினார்கள். எனது மகன் ரெயிலில் அடிபட்டு படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். உடனே பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு அவன் அசைவின்றி கிடந்தான்.

    அவன் ஜிம்முக்கு போய் வாட்டசாட்டமாக இருப்பான். அவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்க நினைத்தேன். ஆனால் அவன் நிலை இப்படி ஆகிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

    காதல் பற்றி எங்களிடம் தெரிவித்து இருந்தால் சமாதானம் செய்து இருப்போம். அவன் எதையுமே சொல்லாததால் இப்படி ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
    • மதுரையில் இருந்து விமானம் வாயிலாக 1.45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு இதயம் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    மதுரையைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    இதையடுத்து அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அவரிடம் இருந்து தானமாகப் பெற்ற இதயத்தைப் பொருத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி, மதுரையில் இருந்து விமானம் வாயிலாக 1.45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு இதயம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் அந்த உறுப்பு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

    மதுரையில் இருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு, 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு வர உதவியாக இருந்த சென்னை காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு, காவேரி மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

    • இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
    • 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

    இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்களான அந்த குழந்தையின் பெற்றோரும் அதற்கு உடன்பட்டனர்.

    இதையடுத்து உடல் உறுப்புகளை ஆபரேசன் செய்து அகற்றுவது தொடர்பாகவும், தானம் தேவைப்படுபவர்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப் பட்டது.

    மிகவும் சிறிய வயது குழந்தையின் உறுப்புகள் என்பதால் பொருத்தும் தகுதி உடையவர்கள் கிடைப்பதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

    இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

    அந்த 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    • வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார்.
    • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது

    கோவை,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி வித்யா(வயது 42). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார். அப்போது அவரது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவ ரது குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவரை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறிதது ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரது குடும்பத்தி னருக்க தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் வித்யாவின் உடல் உறுப்பு களை தானம் பெறு வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.

    இதனை சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ரிஷாந்த் என்ற 16 மாத ஆண் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. மூளையில் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 8 நாட்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    அதையடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் பேசி உறுப்பு தானம் அளிக்க சம்மதம் பெற்றனர். குழந்தையின் சிறுநீரகங்களும், கல்லீரலும் எடுக்கப்பட்டு, வேறு 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. அந்த குழந்தைகள் உயிர் பிழைத்தனர். மேலும், இதய வால்வுகளும், விழி வெண்படலமும் எடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேமித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மிக இளம் வயதில் உறுப்பு தானம் அளித்தவர் என்ற பெருமை, அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.

    • மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மோடமங்கலம் அருகே மேல்பாறை காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயமணி (வயது 52).

    இவர்களுக்கு மல்லிகா என்ற மகளும், பூபதி என்ற மகனும் உள்ளனர். மல்லிகா கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி மல்லிகா வீட்டுக்கு வருவதற்காக தாயார் ஜெயமணியும், சகோதரர் பூபதியும் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

    சின்னியம்பாளையம் அருகே வந்தபோது 4 சக்கர வாகனம் அவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயமணியும், பூபதியும் தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஜெயமணி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 9-ந் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.

    அதன்படி ஜெயமணியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    ×