search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன் கோவில்"

    • மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம் நடந்தது.
    • திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்தி களுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பூஜை, தீபாராதனை முடிந்ததும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வருவார்கள்.

    ஜூன் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை திருஞான சம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5-ந் தேதி காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடும் நடக்கிறது.

    அன்றிரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருவார். மே 24-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடப்பதால் உபய தங்கரதம், உபய திருக் கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான திருமறைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்க வாசகர் பிறந்தார். இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31-ந் தேதி காலை 11.15 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    • மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வந்து சேரும்.

    அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கோபுரங்கள்-ஆயிரங்கால் மண்டபம் கணினி வரைபடமாக ஆவணப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
    • மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை

    உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள கோபுரம் மற்றும் சிற்பங்கள் ஆகியவை பல நூறாண்டுகள் பழமையும், சிறப்பும் வாய்ந்தவை.

    மதுரை மாநகரின் மையத்தில் 15 ஏக்கர் பரப்ப ளவில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில், வரைபடம் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவி லின் கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதையும் நவீன கணினி வரைபடம் மூலம் ஆவணப் படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்கள், நுழைவு வாயில்கள், கோவில் விமா னங்கள், பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பகுதிகளை கணினி வரைபடமாக உருவாக்கு வதற்காக ரூ.4.5 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரை வில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வரலாற்று பெருமை, ஆன்மீக சிறப்பு வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    உலக அளவில் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்க ணக்கில் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பிட்ட மாதங்களில் வெளிநாட்டு பயணிகளும் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட வருவார்கள்.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புராதன பழமை வாய்ந்தது. இங்கு பல அரிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் வியாபாரிகள் பலர் கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இந்த மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது.

    அதன் பிறகு வீரவசந்தராயர் மண்டபத் தில் சேதமான பழமை வாய்ந்த சிற்பங்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தரா யர் மண்டபத்தை புனர மைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதன் ஒரு பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவி லில் விபத்து நடந்த பகுதியை நேரடியாக பார்வை யிட்டனர். அப்போது வீர வசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பது தொடர்பாக அறிவியல் ரீதியான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

    தமிழக அரசு இந்த மண்டபத்தை புனரமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. அடுத்தபடியாக சிற்பிகள் குழுவுக்கான ஒப்பந்த வேலைகள் வழங்கப்பட்டன.

    இந்த பணிகள் மந்தமாக நடந்து வந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிதலம் அடைந்த வீர வசந்த ராயர் மண்ட பத்தை புனர மைக்கும் பணியை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் உள்ள குவாரிகளில் இருந்து பிரம்மாண்ட கல் தூண்கள் லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.

    அவைகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அவனியாபுரம் செங்குளத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் வைக்கப்பட்டன. அங்கு கலைநயமிக்க கல் தூண்களை செதுக்கும் பணியில் சிற்பிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்ற னர். தயாரான கல்தூண்கள், பெரிய லாரிகள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அவைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளு கிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.

    அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள். சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    மதுரை:

    தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.

    ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் பணியாளர்களின் முழு விவரங்களை சேகரித்துள்ளனர்.

    மதுரை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை (18-ந் தேதி) மதியம் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார்.

    கோவிலில் நடைபெறும் அன்ன தானத்திலும் பங்கேற்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் 1 மணி நேரம் வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனை முன்னிட்டு ஒட்டு மொத்த மதுரை மாநகரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சித்திரை வீதிகள் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் 8 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அர்ச்சர்கர்களின் விவரங்களை முழு விவரங்களை சேகரித்துள்ளனர். அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களும் போலீசாரால் குறிப்பு எடுக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    ஜனாதிபதி மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கோவிலுக்கு வெளியே தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்தபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். சித்திரை வீதியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தற்காலிக சிறப்பு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்லும் வழித்தடம் அனைத்தும் மாநகர காவல் எல்லைக்குள் உள்ளது. எனவே போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஜனாதிபதி சுற்றுச்சாலையை பயன்படுத்தும் பட்சத்தில் புறநகர் போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று போலீஸ் சரக டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் ஒரு குழு டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது. அவர்கள் மீனாட்சி கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்தை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையம் முதல் மீனாட்சி-சுந்தரேசுவரா் கோவில் வரை உள்ள சாலைகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக தெற்குவாசல் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெற்குவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடா்பான பழைய வாகனக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து சாலை சீரமைப்புப் பணிகள், வா்ணம் பூசுதல், வேகத் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் ஜனாதிபதி வருகையின் போது வேலை பார்க்கும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாலை இன்று காலை அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மதுரையில் இன்று காலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. 

    • ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
    • ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    மதுரை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை வருகிறார். கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி அன்று காலை 11.30 மணிக்கு மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் இருந்து காரில் பலத்த பாதுகாப்புடன் ரிங்ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மதியம் மதுரை வந்தனர். அவர்கள் 3 நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    மதுரை ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மாநகர் காவல் துணை ஆணையாளர் சாய் பிரனீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாய்த்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
    • அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று அம்மன்-சுந்த ரேஸ்வரருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக் கப்படுவார்கள்.

    இதேபோல் இம்மை யிலும் நன்மை தருவார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்பு டையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், பேச்சியம்மன் படித்துறை, காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில், உள்பட பல சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி. 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர்.

    தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

    பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.

    தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
    • இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை:

    மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் அமைப்பு யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விரும்பும் பக்தர்கள் ரூ. 1000 செலுத்தினால் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக கோவில் மேற்பார்வையாளர் ஆறுமுகம் போலீசில் புகார் செய்தார். அதில், மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்

    மதுரை

    தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் முழுநேர அன்னதானம் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த திட்டம் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியர் கோவில் ஆகிய தலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த நிலையில் "தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    அதற்கான விழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் கோவில் அதிகாரிகள் செல்லத்துரை, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன்படி அங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×