search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங்"

    • மிச்சாங் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு
    • பொதுநல மனுவை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், 8 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிட, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த மகேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இடைக்கால நிவாரண தொகையாக மூவாயிரம் கோடி ரூபாயை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தினார்.

    இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், மிச்சாங் புயல் நிவாரணம் தொடர்பாக, ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் முறையிடலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    • 21-ம் நூற்றாண்டில் தமிழகம் டிசம்பர் மாதம் பல பேரழிவுகளை கண்டுள்ளது.
    • 2004 சுனாமி, 2015 மழை வெள்ளம், வர்தா புயல் என இன்னல்களை சந்தித்துள்ளது.

    தமிழகத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் சற்று ஆகாது என்றே கூறலாம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் இயற்கை சீற்றங்களை டிசம்பர் மாதத்தில்தான் எதிர்கொண்டுள்ளது.

    2004-ம் ஆண்டு வங்கக் கடலில் சுனாமி ஏற்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல மாதங்கள் பிடித்தன.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் ஒருபோதும் மறக்காது. சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அதேவேளையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான வெள்ளம் திறந்து விடப்பட்டது.

    ஏற்கனவே மழை வெள்ளம் தேங்கிய நிலையில், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து அடையாறு கரையோரம் உள்ள பகுதியை சூழ்ந்தது. மேலும், அதுவரை தண்ணீரை கண்டிராக சென்னையில் பெரும்பாலான மையப்பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் உயிரிழந்த நிலையில், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

    2016-ல் வர்தா புயல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சுழன்று அடித்தது. இதில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும் ஆயிரக்காணக்கான மரங்கள் வேரோடு சரிந்தது போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது.

    சுமார் 8 வருடங்கள் கழித்து இந்த வருடம் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் மீண்டும் ஒருமுறை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தன. இந்த முறை ஏரியில் இருந்து சீரான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடானாது. சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் பயனளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

    மழை மற்றும் காற்று காரணமாக எண்ணூர் துறைமுக முகத்துவாரத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி உள்ள கடற்பகுதி எண்ணெப் படலமாக மாறியது. பின்னர் கடும் போராட்டத்திற்குப்பின் எண்ணெய் அகற்றப்பட்டது.

    மிக்சாங் புயலால் சென்னை மக்கள் அடைந்த சோகம் அடங்குவதற்குள் 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 150 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்தது. மேக வெடிப்பு இல்லை, புயல் இல்லை, காற்றழுத்த தாழ்வு இல்லை, கீழடுக்க சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இவ்வளவு மழை எப்படி பெய்தது என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.


    இந்த கனமழை காரணமாக இதுவரை தண்ணீர் தேங்காத கூடங்குளம் போன்ற வறண்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டால், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம்வரை வெள்ளத்தில் மிதந்தது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர்- சென்னை ரெயில் சுமார் ஆயிரம் பயணிகளுடன் சிக்கியது. திருச்செந்தூர்- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருநெல்வேலி பாதைகள் முற்றிலும் சேதடைந்தன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியது. ஏரி, குளம் என அனைத்தும் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இரண்டு வாரங்களாக பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் வேதனையடைந்தனர்.

    • நடிகர் பாலா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    இந்நிலையில், சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்துள்ளார். அதாவது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.


    இதுகுறித்து பாலா பேசியதாவது, "என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்" என்றார். இவருக்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    • நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

    சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • திருவள்ளூரில் துவங்கி கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
    • தமிழகம், புதுவை, காரைக்காலில் அக்டோபர் 1-ந்தேதி முதல் தற்போது வரை 34 செ.மீ. மழை பெய்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் பத்திரிகைாயளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த மூன்று நாட்களில் (டிசம்பர் 3, 4 மற்றும் 5-ந்தேதி) வடதமிழக கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

    இன்று திருவள்ளூரில் துவங்கி கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கிளல் கனமழை பெய்யக் கூடும்.

    4-ந்தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

    இன்று திருவள்ளூர் முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ். வேகத்தில் வீசும்.

    நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கடற்கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். விழுப்பும், புதுவையில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடம்.

    தமிழகம், புதுவை, காரைக்காலில் அக்டோபர் 1-ந்தேதி முதல் தற்போது வரை 34 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 36 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். வழக்கமான மழையை விட 7 சதவீதம் குறைவு.

    சென்னையில் 62 செ.மீ.. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்த்தில் சராசரியாக 67 செ.மீ. பெய்திருக்க வேண்டும். 7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

    இன்று மற்றும் நாளையும் தென்மேற்கு வங்கக் கடல், மத்தயி மேற்கு வங்கக் கடல், வட தமிழக கடலோரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். 

    ×