search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான்"

    • விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி மாரத்தான்.
    • 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு.

    தஞ்சாவூர்:

    சுற்றுசூழலை பாதுகாத்திட வேண்டும். விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்- சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மண்டல தலைவர் காரல்மார்க்ஸ், பொது செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் ஆண்கள், பெண்களுக்கு தனி தனி பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.8000, ரூ.6000, ரூ.5000 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.6000, ரூ.5000, ரூ.3000 மற்றும் 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், சின்னை.பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    போட்டியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கண்ணன், எஸ்.இ.டி.சி- சி.ஐ.டி.யூ மாநில துணை தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஜீவா, திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி ரீகேப் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாதவிடாய் சுகாதாரம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ரீகேப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தலை–வர் தலைவர் மற்றும் அறங்காவலர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சுப சோமு, மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை, ஜங்ஷன் கோட்டத் தலை–வர் பிரியங்கா பட்டேல், பிரிவு பஜார் மைதீன், வெல்லமண்டி பாலசுப்பிர–மணியன், வீரேஸ்வரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தினி சக்திவேல் நன்றி கூறினார்.


    • மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார்.
    • 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    சிட்னி :

    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார்.

    ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப்பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார். மேலும் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை கேட் ஜேடனின் சாதனையை முறியடிக்கவும் அவர் விரும்பினார்.

    அதன்படி 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஒரு முனையில் இருந்து நாட்டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மாரத்தான் ஓட்டத்தை முர்ரே தொடங்கினார்.

    ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார். தொடர் மாரத்தான் ஓட்டத்தால் உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள், கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் முர்ரே மாரத்தானை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடினார். அதன்படி அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    இதன் மூலம் கேட் ஜேடனின் சாதனையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை முர்ரே படைத்துள்ளார்.

    • கோவை மாநகர போலீஸ் நிலையங்களில் நடைபெற்றது.
    • போலீஸ், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர போலீஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த மாரத்தானானது அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கி.மீ. நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், துணை கமிஷனர் சிலம்பரசன் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோன்று கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் பாலக்காடு ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து கோவைப்புதூர் பிரிவு வரை நடைபெற்றது.

    மாரத்தான் ஓட்டத்தை தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா சாலை பாதுகாப்பு குறித்த பேசினார். அதனை தொடர்ந்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் குனியமுத்தூர் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.உக்கடம் போலீசார் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர போலீஸ் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
    • மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும், மூன்றாமிடத்தை கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர் வல்லரசு பெற்றார். மூன்றாமிடம் பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற் கல்வித்துறை இயக்குநர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

    • மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 11-வது மாரத்தான் பந்தயம் இன்று நடந்தது. நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் இந்த பந்தயம் நடத்தப்பட்டது.

    ஆண்கள், பெண்களுக்கான இந்த மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது. முதலில் முழு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த பந்தயம் 42.195 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 32.186 கிலோ மீட்டர் (16 வயதுக்குட்பட்டோர்) தூரத்துக்கு ஓட்டம் நடந்தது. மினி மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) 10 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் பந்தயம் நடந்தது.

    4 பிரிவுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே முடிவடைந்தது.

    21 கிலோ மீட்டர் தூரத்துக்கான மினி மாரத்தான் ஓட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பந்தயம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திர பாபு இதில் பங்கேற்றனர். 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் காலை 6 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. சாந்தோம், அடையாறு வழியாக தரமணி சென்றடைந்தது.

    மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.


    • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே ரோட்டரி கிளப்ஆப் கோல்டன் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலங்காப்புலி விலக்கு ரோட்டில் இருந்து தொடங்கிய போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அமிர்தாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளியின் திட்ட சேர்மன் ஜான்பிரிட்டோ, பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மதுரை

    மதுரையில் போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை பினாக்கிள் ஹாப் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    இதனை மதுரை மாநகர காவல்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. 'மாற்றத்திற்காக ஓடுங்கள்' என்ற தாரக மந்திரத்தின் மூலம், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமைந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஜித்சிங்காலோன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண், சிறுவர்- சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    ரேஸ் கோர்ஸ் சாலை, எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், அழகர்கோவில் மெயின் ரோடு, புதூர் போலீஸ் நிலையம், கடச்சனேந்தல் வழியாக சென்றது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எங்கு மாரத்தான் நடந்தாலும் அதில் கலந்து கொண்டு ஓடி உடல் நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இன்று காலை போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மாற்றத்திற்கான மாரத்தான்-2022 போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டிைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியை தொடங்கி வைத்ததோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாரத்தான் ஓடி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் எங்கு மாரத்தான் நடந்தாலும் அதில் கலந்து கொண்டு ஓடி உடல் நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் இன்று வல்லத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் 20 கிலோ மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். மேலும் போட்டியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் ஓடினர். வல்லம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாரத்தான் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்குக்கு வந்து பின்னர் அங்கிருந்து பல்கலை கழகத்துக்கு சென்று முடிவடைந்தது.

    இதேப்போல் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் பிரிவிலும் மாரத்தான் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக நடந்தது. இந்த பிரிவிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாற்றுதிறனாளி ஒருவரும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

    முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்க–ப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திர–சேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு தடகளம் சங்கம் துணை தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி–ப்பிரியா, பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ், துணைவேந்தர் வேலுசாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திகேசவன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை தடகள சங்க செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×