search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான்"

    • மினி மாரத்தான் போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விழா திட்டத்தின் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அதன் அமைப்பாளர் விஜயகுமார் மினி மாரத்தான் விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.

    இந்த மினி மாரத்தான் போட்டியை இன்று காலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டிகளில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு , 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு, 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை பட்டுக்கோட்டை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ரவி தலைமையில் ஒருங்கிணைந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வழி நடத்தினர்.

    • போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்காக மினி மாரத்தான் போட்டி நடக்கிறது.
    • உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி மற்றும் உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்ட் 13 .8 .23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

    உடுமலை இராகல்பாவிபிரிவு முதல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ. 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணத் தொகை புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுக்காக அளிக்கப்படுகிறது.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.9865275123 , 830056811 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தவிர பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 8.8.23 (செவ்வாய்க்கிழமை )மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது

    போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ். ஏ.ஒய்.கான், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கே .ஆர் .செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவர் தினேஷ் குமார் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
    • மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 160 மாணவ-மாணவிகளும் இதில் அடங்குவர்.

    அந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மகன் தினேஷ்குமார் என்பவர் 4 ஆண்டு படித்து வந்தார். இவரும் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

    போட்டியில் பங்கேற்று விட்டு கல்லூரி விடுதிக்கு வந்த தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுய நினைவு இழந்து காணப்பட்ட தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.
    • உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.

    இரட்டையர்கள் சாதனை

    அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.

    மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 1500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் தங்கம், 400 மீட்டரில் வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கலெக்டர் பாராட்டு

    இந்நிலையில் மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 வயது இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் மற்றும் தகடகங்களை போட்டியில் சாதனை படைத்துள்ள உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் ஆகியோருக்கு தென்காசி கலெக்டர் வாழ்த்து க்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.

    மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் என்.ஆர். மணி, தலைவர் ராம்குமார், செயலாளர் முருகன், துணை செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சங்கர், இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவகுமாரி, பள்ளியின் முதல்வர் செய்யது, துணை முதல்வர் கவுரி மற்றும் ராணுவவீரர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    • விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.

    போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
    • ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.ஆண் மற்றும் பெண் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும் நடைபெற உள்ளன.

    இதில் ஆண் மற்றும் பெண் (ஓபன்) பிரிவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.250- செலுத்த வேண்டும். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    மேலும் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசாக 50 பேர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.

    இதே போல் பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். முதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்க ப்படும்.

    இந்த பிரிவிலும் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    இந்த மாரத்தானில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

    இந்தியாவில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.

    நிர்வாகம் எடுக்க முடிவே இறுதியானது.

    போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன் தெரிவித்துள்ளார்.

    • விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.

    தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.

    இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட அயலக அணி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பாலகுமார், சுரேஷ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    ×