search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்   தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி
    X

     தீயணைப்பு துறை சார்பில் தீத்துண்டு வார விழாவை முன்னிட்டு கடலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான தீயணைப்பு துறை வீரர்கள் கலந கொண்டனர்.

    கடலூரில் தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி

    • வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.

    இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×