search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரத்தில் இருந்து"

    • புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக தவறி தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் தேங்காய் பறிப்பதற்காக பெருந்துறை வாய்க்கால் மேடு, பள்ள க்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்ட த்திற்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப் போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது.
    • சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த சத்யா என்பவரது தோட்டத்தில் சம்பவத்தன்று மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×