search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஊழியர் பலி"

    • புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர்(48). இவர் சித்தையன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின்வழித்தட ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் செம்பட்டி அடுத்த நரசிங்கபுரம் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான இச்சம்பவம் குறித்து சித்தையன்கோட்டை உதவி மின்பொறியாளர் கிருஷ்ணஜெயந்தி செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.
    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பாளைய ங்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது61). இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தார். புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாரா யணயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×