search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய கிழக்கு நாடுகள்"

    • அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

    உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

     

    மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

     

    அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

     

    • பஹ்லாவி வம்சத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றினார் கொமெய்னி
    • ஈரானின் ராணுவம், இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை என அழைக்கப்படுகிறது

    மேற்காசிய நாடான ஈரானில் 1925லிருந்து பஹ்லாவி வம்சத்தினரின் (Pahlavi Dynasty) மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 1979ல் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பஹ்லாவிகள் ஆட்சி அகற்றப்பட்டு, அயதொல்லா கொமெய்னி (Ayatollah Khomeini) தலைமையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் ஆட்சி பதவிக்கு வந்தது.

    தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை (Islamic Revolutionary Guards Corps) எனும் ஈரானின் ராணுவத்தை ஈரான் அமைத்தது. அதன் 5 முக்கிய அங்கங்களில் ஒன்று குட்ஸ் படை (Quds Force).

    குட்ஸ் படையை கொண்டு ஈரான், பிற நாட்டினர் மீது தங்கள் ஆதிக்கத்தை வளர்க்கவும், தங்கள் கோட்பாடுகளை பரப்பவும், உளவு மற்றும் மறைமுக சதி வேலைகளின் மூலம் நீண்ட காலமாக முயன்று வருகிறது.

    தங்கள் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திளை எதிர்க்கவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் செயல்படும் "எதிர்ப்பின் மையம்" (Axis of Resistance) என வர்ணிக்கப்படும் ஈரான், குட்ஸ் படையினர் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ படைகளையும், அரசியல் கட்சிகளையும் பல நாடுகளில் ஆதரித்து, வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் தங்கள் நாடுகளில் ஈரானுக்கு ஒரு மறைமுக பிரதிநிதியாக (proxy) செயல்படுகின்றன.

    ஈராக், லெபனான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த ஆதரவு, வன்முறை சித்தாந்தங்களை ஏற்காத பிற அரபு நாடுகளில், ஈரானுக்கு கிடைக்கவில்லை.

    ஏமனின் ஹவுதி, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவின் ஜய்னாபியோன் பிரிகேட் மற்றும் ஃபதேமியோன் பிரிவு, ஈராக்கில் கதாய்ப் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன காசா பகுதியின் ஹமாஸ், பக்ரைனின் அல் அஷ்டார் பிரிகேட்ஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், ஈரானின் எதிர்ப்பு மையத்தின் மறைமுக ஆலோசனை, ராணுவ மற்றும் நிதியுதவி ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவை.

    எதிர்ப்பின் மையத்திற்கு நிதியுதவி கிடைப்பதை அனைத்து வழிகளிலும் அமெரிக்கா 1984லிருந்து தடுக்க முயன்று வருகிறது.

    தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை அமைப்புகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஈரானையும், அதன் புரட்சி வீரர்கள் படையின் தாக்கத்தையும் இனி வளர விட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

    ×