search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவல்"

    • மாவட்ட நிர்வாகம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா முதல் அலை, 2-வது அலையின்போது ெதாற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நட வடிக்கைகளை கடை பிடித்தனர்.

    மேலும் மாவட்ட நிர்வா கம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. மீண்டும் இந்நோய் தலை தூக்காமல் இருக்க சுகாதார துறை சார்பில் பொதுமக்க ளுக்கு அவ்வபோது பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று தலை தூக்கியது. சேலத்தில், தின மும் 20, 25 வீதம் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது. அதுபோல் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் 32 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • வெளி மாவட்டங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கடலூர்: 

    கொரோனாவின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி முதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்டத்தில் 75 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சையில் இருந்த 37 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில் கொரோனா பாதிப்பின் காரணமாக 221பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். வெளி மாவட்ட ங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய பாதிப்பில் 24 பேர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
    • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வலியுறுத்தல்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மநாகராட்சியில் 14 பேர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டியில் தலா 2, கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 73 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி யதாவது:-

    சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், வரும் நாட்களில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ×