search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repeat"

    • சந்திரகாச்சி-மங்களூரு இடையே விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
    • இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மங்களூரு சென்டிரல் வரை செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி சந்திரகாச்சி-மங்களூரு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு கரக்பூர், ஜலேஷ்வர், பலஸோர், விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9.32 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர் வழியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும், இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு சென்டிரல்-சந்திர காச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 17-ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக திங்கட்கிழமை மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
    • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வலியுறுத்தல்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மநாகராட்சியில் 14 பேர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டியில் தலா 2, கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 73 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி யதாவது:-

    சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், வரும் நாட்களில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ×