search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும்"

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

      பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

      வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

      இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

      அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

      சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

      சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

      இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

      • திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது.
      • கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது.

      உடுமலை:

      திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

      தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.

      கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமே ஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.

      இந்நிலையில் மங்களூருவி லிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

      • தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
      • கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

      கன்னியாகுமரி:

      தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

      ஆன்லைன் லாட்டரி விற்பனை மட்டுமின்றி கேரளா லாட்டரி சீட்டுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

      இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அதிரடி சோ தனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

      கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லாட்டரிசீட்டு விற்பனை நடைபெற்று வரும் கடையில் வேலை பார்த்த பெண்க ளுக்கு தனியாக செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

      லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் தினமும் வந்து லாட்டரி சீட்டு வாங்காத பட்சத்தில் பெண்களே தொடர்பு கொண்டு பேசி லாட்டரி சீட்டுகளை வாங்கு மாறு தெரிவித்துள்ளனர். செல்போன் மூலமாக அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று உள்ளது.

      குறிப்பிட்ட அளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிக்கு புதிதாக நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண்களும் பயன் பத்தப்பட்டுள்ளது. அலாரம் உள்பட சிவப்பு பச்சை லைட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

      லாட்டரி சீட்டு விற்பனையின் பின்னணியில் உள்ள வர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்டரி சீட்டு விற்பனை செய்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் நாகர்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

      ஆனால் போலீசார் இதை கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      • விவசாயிகள் மகிழ்ச்சி
      • அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.

      இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

      இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

      இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

      • கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது. இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள்.
      • சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கூர் பகுதியில் கால்நடைகளை கொன்று குவிக்கும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

      மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ஜினீயர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது.

      இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 5-ந் தேதி இருக்கூர்

      கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தேன். வனத்துறை சார்பில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

      அதன்படி சிறுத்தை புலியை பிடிப்பதற்கு, 2 கூண்டுகள் மற்றும் 4 விலங்குகள் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சிறுத்தை புலியை தேடும் பணியில் 42 வனத்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.

      இது மட்டுமின்றி வன உயரடுக்கு படையை சேர்ந்த 4 நபர்கள், கோயம்புத்தூர் மற்றும் வைகை அணை பகுதியிலிருந்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப கருவிக ளுடன் வந்து உள்ளனர். 2 வனத்துறை கால்நடை மருத்துவர்களும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான பணியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

      சிறுத்தை புலியை பிடிப்ப தற்கு வனத்துறை சார்பில் அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதச்சுவடு மூலம் சிறுத்தை புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கும், கூண்டுகளை அதிகப்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

      மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுத்தை புலி நடமாடும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த

      வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

      இந்த ஆய்வு கூட்டத்தில் கபிலர் மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ஜ.க மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் (திருச்சி மண்டலம்) சதீஸ், சேலம் மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் (ஓய்வு) மனோகரன், பிரகாஷ் , கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

      அதைத் தொடர்ந்து விரைந்து சிறுத்தை புலியை பிடிக்க கோரி, பா.ஜ.க.வினர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.

      • கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
      • அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டனர்.

      சேலம்:

      தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

      இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

      இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

      இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிக மாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதா

      ரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்க ளில் எங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      • பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது.
      • இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

      சத்தியமங்கலம்:

      சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, ஆசனூர், தலைமலை கேர்மாளம், கடம்பூர், பங்களாபுதூர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.

      இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியேறி வருகிறது.

      மேலும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகிறது.

      இதே போல் கடந்த மாதம் பவானிசாகர் அருகே புதுபீர் கடவு பீட் பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை வந்தது. மேலும் ஊருக்குள் புகுந்து அங்கு பட்டியில் உள்ள கால்நடைகளை வேட்டை யாடி வந்தது.

      இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டு வைத்து பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை மங்களபட்டி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

      இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது. தொடர்ந்து அந்த சிறுத்தை ஒரு வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்த நாயை கவ்வி பிடித்து சென்று அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து கொன்று தின்றது.

      இதையடுத்து மீதியான இறைச்சியை மரக்கிளை யிலேயே விட்டு விட்டு சென்று விட்டது.

      இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது நாயை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நட மாட்டம் இருப்பது தெரிய வந்தது.

      இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, புது பீர் கடவு பீட் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் உள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றனர்.

      இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதி யில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை வனத்துறையினர் பிடித்த னர். இதனால் நிம்மதியாக இருந்தோம்.

      ஆனால் மீண்டும் இந்த பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைைய கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரி க்கை விடுத்துள்ளனர்.

      • சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
      • எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

      தாளவாடி:

      சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது.

      இந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானையை விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

      அதை தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் கும்கியானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

      இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவசாமி (28) என்பவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

      இதுபற்றி வனத்துறைக்கும் அருகில் இருந்த விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் சென்றது. இதில் 1 ஏக்கர் கரும்பு சேதம் ஆனது. கருப்பன் ஆட்கொல்லி யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்திக்கு சென்றுள்ளதால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

      • சந்திரகாச்சி-மங்களூரு இடையே விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
      • இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

      சேலம்:

      மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மங்களூரு சென்டிரல் வரை செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி சந்திரகாச்சி-மங்களூரு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு கரக்பூர், ஜலேஷ்வர், பலஸோர், விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9.32 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர் வழியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும், இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு சென்டிரல்-சந்திர காச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 17-ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடையும்.

      பின்னர் இங்கிருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக திங்கட்கிழமை மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.
      • இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார்.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

      இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தர்மாபுரம் பகுதியில் தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி மல்லப்பா என்பவரை மதித்துக் கொன்றது. அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப ட்டதை அடுத்து விவசாய கொன்ற ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.

      மேலும் அந்த ஆட்கொல்லி யானையை வனப்பகுதியை விட்டு வெளி–யேறாமல் தடுக்க இரியபுரம் வனப்ப–குதியில் இருந்து திகினாரை வரை 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழியை பராமரித்து ஆழம் மற்றும் அகலப்படுத்த வனத்துறை திட்டமிட்டு தற்போது பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

      இந்தப் பணியை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்தி–ர–குமார்மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார். அகழி பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்ப–ட்டுள்ளதா–கவும் தற்போது ஆட்கொல்லி யானை கோடம்பள்ளி வனப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் மீண்டும் ஊருக்குள் திரும்பி வராத வகையில் கும்கி யானைகள் மூலம் யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

      • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
      • மேலும் சிகிச்சை ஒரே நாளில் 28 பேருக்கு பாதிப்பு.

      சேலம்:

      சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 28 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

      ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 116 பேரில் 13 பேர் குணமாகினர். தற்போது 131 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

      கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

      தற்போது சேலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவும், பரிசோதனையை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

      பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பள்ளிகளில் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

      • சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
      • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வலியுறுத்தல்.

      சேலம்:

      சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

      சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மநாகராட்சியில் 14 பேர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டியில் தலா 2, கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

      ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 73 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி யதாவது:-

      சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

      வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், வரும் நாட்களில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

      ×