search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மத்திய கிழக்கில் மறைமுக ஆதிக்கம்: வன்முறையை ஊக்குவிக்கிறதா ஈரான்?
    X

    மத்திய கிழக்கில் மறைமுக ஆதிக்கம்: வன்முறையை ஊக்குவிக்கிறதா ஈரான்?

    • பஹ்லாவி வம்சத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றினார் கொமெய்னி
    • ஈரானின் ராணுவம், இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை என அழைக்கப்படுகிறது

    மேற்காசிய நாடான ஈரானில் 1925லிருந்து பஹ்லாவி வம்சத்தினரின் (Pahlavi Dynasty) மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 1979ல் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பஹ்லாவிகள் ஆட்சி அகற்றப்பட்டு, அயதொல்லா கொமெய்னி (Ayatollah Khomeini) தலைமையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் ஆட்சி பதவிக்கு வந்தது.

    தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை (Islamic Revolutionary Guards Corps) எனும் ஈரானின் ராணுவத்தை ஈரான் அமைத்தது. அதன் 5 முக்கிய அங்கங்களில் ஒன்று குட்ஸ் படை (Quds Force).

    குட்ஸ் படையை கொண்டு ஈரான், பிற நாட்டினர் மீது தங்கள் ஆதிக்கத்தை வளர்க்கவும், தங்கள் கோட்பாடுகளை பரப்பவும், உளவு மற்றும் மறைமுக சதி வேலைகளின் மூலம் நீண்ட காலமாக முயன்று வருகிறது.

    தங்கள் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திளை எதிர்க்கவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் செயல்படும் "எதிர்ப்பின் மையம்" (Axis of Resistance) என வர்ணிக்கப்படும் ஈரான், குட்ஸ் படையினர் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ படைகளையும், அரசியல் கட்சிகளையும் பல நாடுகளில் ஆதரித்து, வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் தங்கள் நாடுகளில் ஈரானுக்கு ஒரு மறைமுக பிரதிநிதியாக (proxy) செயல்படுகின்றன.

    ஈராக், லெபனான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த ஆதரவு, வன்முறை சித்தாந்தங்களை ஏற்காத பிற அரபு நாடுகளில், ஈரானுக்கு கிடைக்கவில்லை.

    ஏமனின் ஹவுதி, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவின் ஜய்னாபியோன் பிரிகேட் மற்றும் ஃபதேமியோன் பிரிவு, ஈராக்கில் கதாய்ப் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன காசா பகுதியின் ஹமாஸ், பக்ரைனின் அல் அஷ்டார் பிரிகேட்ஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், ஈரானின் எதிர்ப்பு மையத்தின் மறைமுக ஆலோசனை, ராணுவ மற்றும் நிதியுதவி ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவை.

    எதிர்ப்பின் மையத்திற்கு நிதியுதவி கிடைப்பதை அனைத்து வழிகளிலும் அமெரிக்கா 1984லிருந்து தடுக்க முயன்று வருகிறது.

    தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை அமைப்புகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஈரானையும், அதன் புரட்சி வீரர்கள் படையின் தாக்கத்தையும் இனி வளர விட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

    Next Story
    ×