search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்"

    • திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர்.
    • தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள்.

    ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இது திருமணத்துக்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

    சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். திருமணத்திற்கு வந்த குடிமகன் விருந்தாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருமண மண்டபத்தில் இருந்த சில குடிமகன்கள் ஓடோடி சென்று போட்டி போட்டுக்கொண்டு தாம்பூல பையுடன் மதுபாட்டிலையும் வாங்கினர். இதற்காக அவர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தனர்.

    ஆனால் சென்னையில் இருந்து வந்த மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருமணத்துக்கு வந்த பெண்கள் மற்றும் சிலர் முகம் சுளித்து சென்றனர்.

    • தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராய விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.
    • டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.

    திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கையில் எடுத்து மனு கொடுக்க புறப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மதுபாட்டில்களோடு மனு கொடுக்க அனுமதி கிடையாது என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் சமீபத்தில் கள்ள சாராயம் விற்பனை சட்ட விரோதமாக நடை பெற்று வந்தது. கள்ளச்சாராயம் குடித்ததில் 22-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் சில இடங்களில் போலி மதுபா னத்திற்கு அவ்வப்போது பலியாகி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதனால் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளைகள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்குகள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் மதுபான பாட்டில்களை சிலர் சட்டவிரோமாக பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மதுபானம் பதுக்கி விற்ற சிலர் போலீசாரிடம் சிக்கினர்.

    போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது பேரையூரை சேர்ந்த கண்ணன்(வயது42) என்பவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள், ரூ.600, டி.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(63) என்பவரிடம் இருந்து 36 மதுபாட்டில்கள் ரூ.1270, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து பாண்டியன்(48) என்பவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் ரூ.1,610 ரொக்கம், அதேபகுதியை சேர்ந்த காசிபாண்டி(31) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் ரூ.300 பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பேரையூர் மல்லபுரத்தை சேர்ந்த கேசரி(43) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரத்து 930, வில்லூர் பகுதியை சேர்ந்த பொன்னு சாமி(36) என்பவரிடம் இருந்து 148 மதுபாட்டில்கள், ரூ.1,260 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டி ல்களுடன் சிக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் தங்கபாண்டி என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் சார்பில் சட்டவிரோதமாக மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்களை மாநகர மதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

    • சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது.
    • மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

    இதனிடையே நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    மதுக்கடையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள மர்ம ஆசாமிகள் பணப்பெட்டியில் பணம் ஏதும் இ்ல்லாததால் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, விற்பனையாளர் சுப்பிரமணி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபாட்டில் பதுக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சுதந்திர தினத்தன்று அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள்பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரிடம் இருந்து 41 மது பாட்டில்களும், ரூ.7ஆயிரத்து 20-ம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த உத்தமராஜா என்பவரிடம் 7 மதுபாட்டில்களும், ரூ.3 ஆயிரத்து 930-ம், மங்காபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் 223 பாட்டில்களும் ரூ.1930-ம், மாதா நகரை சேர்ந்த வில்லியம் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், மானகசேரியை சேர்ந்த வைரவன் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த கோபி என்பவரிடம் 30 மது பாட்டில்களும், வைத்தியலிங்கபுரம் சேர்ந்த அய்யனார் என்பவரிடம் 11 மதுபாட்டிலும், ரூ.2,110-ம், கட்டயத் தேவன் பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரிடம் 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கிருஷ்ணன் கோவில் குன்னூர் டாஸ்மாக் கடைக்கு எதிரில் பூவானியைச் சேர்ந்த தங்கபாண்டி, 144 மது பாட்டில்கள் அனுமதி இல்லாமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரமேஷ் தியேட்டர் அருகே ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் அரசு அனுமதி இல்லாமல் 40 மதுபாட்டில் வைத்து இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லட்சுமணன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    • ரெயில்களில் குட்கா- மதுபாட்டில்கள் கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மதுரை

    மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபானம் ஆகியவை கடத்திக்கொண்டு வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை முதல் மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தினர். நிஜாமுதீன்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரையூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 10 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ராஜஸ்தான் மாநிலம் தாஸ்பான் பகுதியைச் சேர்ந்த திகாம்சிங் (வயது 26) என்பவர் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் திகாம்சிங்கை கைது செய்தனர்.

    • காய்கறி கடையின் உள்புறம் மது பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன
    • சுமார் 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கன்னியாகுமரி :

    திருவட்டாறு அருகே உள்ள கைலாச விளை சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 60).

    இவர் காட்டாத்துறை பேரூராட்சிக்குட்பட்ட சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பக்கம் காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில் கடையின் உள்புறம் மது பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இங்கு காலையிலேயே பலரும் வந்து மது பாட்டில்கள் வாங்கு வதாக கூறப்படு கிறது.

    மேலும் மது அருந்துபவர்கள், அந்தப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் வந்து அங்கு நிற்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் அவதூறு பேசுவதாகவும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதன்பேரில் திருவட்டாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். காய்கறி சந்தைக்குச் சென்று, ஜான்சன் கடையில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மது பாட்டில்கள் விற்கப்படுவது தெரிய வந்தது. கடைக்குள் இருந்து சுமார் 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், காய்கறி கடைக்குள் வைத்து மது விற்றதாக ஜான்சனை கைது செய்தனர்.

    ×