search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா- மதுபாட்டில்கள் கடத்தல்
    X

    கைதான வாலிபர்கள்.

    குட்கா- மதுபாட்டில்கள் கடத்தல்

    • ரெயில்களில் குட்கா- மதுபாட்டில்கள் கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மதுரை

    மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபானம் ஆகியவை கடத்திக்கொண்டு வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை முதல் மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தினர். நிஜாமுதீன்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரையூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 10 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ராஜஸ்தான் மாநிலம் தாஸ்பான் பகுதியைச் சேர்ந்த திகாம்சிங் (வயது 26) என்பவர் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் திகாம்சிங்கை கைது செய்தனர்.

    Next Story
    ×