search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபாட்டில் பதுக்கியவர்கள் மீது வழக்கு
    X

    மதுபாட்டில் பதுக்கியவர்கள் மீது வழக்கு

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபாட்டில் பதுக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சுதந்திர தினத்தன்று அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள்பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரிடம் இருந்து 41 மது பாட்டில்களும், ரூ.7ஆயிரத்து 20-ம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த உத்தமராஜா என்பவரிடம் 7 மதுபாட்டில்களும், ரூ.3 ஆயிரத்து 930-ம், மங்காபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் 223 பாட்டில்களும் ரூ.1930-ம், மாதா நகரை சேர்ந்த வில்லியம் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், மானகசேரியை சேர்ந்த வைரவன் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த கோபி என்பவரிடம் 30 மது பாட்டில்களும், வைத்தியலிங்கபுரம் சேர்ந்த அய்யனார் என்பவரிடம் 11 மதுபாட்டிலும், ரூ.2,110-ம், கட்டயத் தேவன் பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரிடம் 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×