search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பெண்"

    • பிளஸ்-2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
    • லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    அதன்படி இந்த பள்ளியில் படித்த மாணவி லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார். மாணவி அல் அப்ரா 575 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், நுபிரா பாத்திமா 573 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    அதற்கு அடுத்து மாணவி ருஷ்தா பாத்திமா 572 மதிப்பெண்ணும், ஹதீஜா பாத்திமா 571 மதிப்பெண்ணும், பாத்திமா பரா, ஐனுல் ஹீதா 571 மதிப்ெபண்கள் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் 9 மாணவிகள் கணக்கு பதிவியல், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் 20 மாணவிகள் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

    அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹீம், முதல்வர் நேபிள் ஜெஸ்டஸ், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.

    • காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

    காரைக்குடி

    மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

    • அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.
    • காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தாள்-1, தாள்-2, தாள்-3 மற்றும் நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களை மத்திய அமைச்சகங்களில் உள்ள பதவிகளில் பணி அமர்த்தி வருகிறது.

    அந்த வகையில், உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2022 அறிவிப்பு கடந்த ஆண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து தாள்-1 தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதிப்பெண் விபரங்களை தேர்வர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்வர்கள் தாங்கள் எழுதிய தாள்-1-ல் எடுத்த மதிப்பெண்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து தங்களின் இந்த தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த வசதி 27.02.2023 இரவு 8 மணி முதல் 13.03.2023 காலை 8 வரை மட்டுமே இருக்கும். மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    இந்த தகவலை இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்.
    • 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் திருவாரூர் வ.சோ.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா மற்றும் திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.

    இதில் 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் ஒருங்கிணைப்பாளர்களாக மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ச.ஜயராமன், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் என்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரிய ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • முதுகலை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
    • இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிமாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு ரூ 4000, இளங்களை கல்விபயிலும் மாணவமாணவியருக்கு ரூ 6000 மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

    பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000 வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் 5000 கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்தி றனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைமற்றும் பார்வைற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

    1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத்தி றனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

    9 வகுப்பு மேல்க ல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகள்கல்வி உதவித்தொகை பெற 30.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர்உ தவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில்க ல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண்சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இதுசம்பந்தமா னவிவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடா;பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
    • தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் உள்பட தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

    தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை மாதம் வழங்கப்பட்டன.

    இதையடுத்து ஒர்ஜினல் சான்றிதழ் அச்சிடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வதில் தாமதம் நிலவியது. இதையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுதல் பணி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது. அதன் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த சான்றிதழ்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

    • விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
    • ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றம் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் நடைபெறும் .

    இத்தேர்வானது வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சென்னை நகரிலும் நடைபெறவிருக்கிறது.

    இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக நடைபெற உள்ளது.

    எழுத்துத்தேரவு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது.

    கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்ற வற்றை ஆராய்வதாக இருக்கும்.

    எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 என்ற முகவரிக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டெல் பவன். டேராடூன் (வங்கி குறியடு 01576) உத்தரகாண்ட் செலுத்ததக்க பொதுப்பிரிவினர் ரூபாய் 600- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555- க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

    இணையவழி மூலமாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழியான www. rimc.gov.in செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு ஆகியவை விரைவு அஞ்சல் வாயிலாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 –லிருந்து அனுப்பப்படும்.

    விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2023 அன்று பதினொன்றை வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    அதாவது அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

    மேலும் 01.07.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டடுப்பாட்டு அலுவலக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய சாலை பூங்கா நகர் சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      கன்னியாகுமரி:

      அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிகளில் பஙகேற்ப தற்காக குமி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேயர் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இதையடுத்து இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு வந்தார். அவரை கப்பல் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

      பின்னர் அவர் அங்கு இருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்கு விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

      விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விளக்கினார்கள். அப்போது விவேகானந்தர் மண்டபம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் செல்பி எடுத்துக் கொண்ட னர்.

      தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர்சிலையை பார்வையிட சென்றார். அங்கு வந்து அவரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவள்ளுவர்சிலையை பார்வையிட்டார். அங்கு நடை பெற்று வரும் ரசா யன கலவை பூசும் பணியை அவர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆரோக்கிய சஞ்சனாவை மணக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

      மாணவிக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

      அவரிடம் மேல்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேட்டார். அப்போது கலெ க்டர் ஆக ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர், மாணவியிடம் அவரது படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

      இதைத் தொடர்ந்து சேனவிளையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தொடக்கக் கல்வி துறையை தனித்துறையாக நிர்வாக ரீதியில் பிரித்து ஆணையிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

      • மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
      • அரசினர் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா

      புதுக்கோட்டை:

      மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது கணினி ஆய்வகம், நூலகம் திறந்து வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

      ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது,

      ஆலங்குடி மண்ணில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பயிலும் மாணவிகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம் கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் மூலம் உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

      நம் தமிழக முதல்வர் 2 ஆண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுள்ளனர்.மாணவர்கள் அனைவரும் அதிகமாக படிக்க வேண்டும்

      அறிவார்ந்த சமுதாய மக்களாக உருவாக வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் உள்ளார்கள். நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சாதித்து உள்ளார்கள். எனவே மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது.

      மாணவர்கள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கேள்வியையும் அதற்கான பதிலையும் எழுதிப் படியுங்கள்.ஒரு முறை எழுதி ப்படிப்பது,பத்து முறை படிப்பதற்கு சமம்.எனவே மாணவர்கள் அனை வரும் நன்றாக படித்து சாதிக்கணும்.மற்றவர்கள் மதிக்கும் அளவு உயரனும்.நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நான் மறமடக்கி அரசுப்பள்ளியில் பயின்றவன்.எனக்கு உயர்கல்வி படிக்க வசதி இல்லை.கலைஞர் தந்த இலவச உயர்கல்வியால் எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதே போல் ஆலங்குடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கலை அறிவியல் கல்லூரியை தந்தவர் நம் தமிழக முதல்வர் தான்.எனவே மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்

      இவ்வாறு அமைச்சர் பேசினார்.

      விழாவில் ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ( மேற்கு) தங்கமணி அரு.,வடிவேலு( தெற்கு) நகரச்செயலாளர் பழனிக்குமார், ஒருங்கிணை ந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத் து, இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிய சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரி யர்கள் மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

      • நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
      • தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.

      செங்கோட்டை:

      தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை மற்றும் அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் கல்வி பயின்று 10-ம், 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் நடந்தது.

      முன்னதாக கொரோனா பரவல் காலம் தொட்டு இன்றுவரையில் சுமார் 100 ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிவரும் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகத்திற்கு சிறந்த சேவைநாயகன் விருது அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞா் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார்.

      பண்பொழி ஐ.ஏ.எஸ். அகாடமி மருதையா முன்னிலை வகித்தார். அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் நிறுவனா் சுதர்சன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீஅகிலானந்தமகராஜ் மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஆசி உரையாற்றினார்.

      நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தமருத்துவா்கள் கலா, நாகராஜன், ஓமந்துாரார்அரசு மருத்துவமனை மருத்துவா் முருகானந்தம், விவேகானந்தா கேந்திர மாவட்ட ஒருங்கிணை்ப்பாளா் கருப்பசாமி, வல்லம் ஊராட்சி மன்ற தலைவா் ஜமீன்பாத்திமா பிரானுார் ஊராட்சி மன்ற தலைவா் ஆவுடையம்மாள்ராஜா, செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர் ஒளி ராமதாஸ், செண்பகராஜன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

      தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீசங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை மற்றும் அறம்செய்ய விரும்பு டிரஸ்ட் உறுப்பினா்கள் செய்திருந்தனர்.

      • விழாவிற்கு தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
      • பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பொன்சிவராகவன், ஆர்.எஸ்.பாண்டியன், சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

      உடன்குடி:

      உடன்குடி அருகே பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் திடலில் முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேக கொடை விழா, இந்து தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளின் விழா மற்றும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

      தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு ஆலோசகர் ராஜேந்திரன், கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க செயலர்முத்து, வணிகர் சங்க பாதுகாப்பு பேரவையின் தென்சென்னை மாவட்ட தலைவர்பாலன், பரமன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லங்காபதி, துணைத்தலைவர் முத்துலிங்கம் பள்ளி செயலர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் துர்கா, குமரன், பொன் இசக்கி, முத்துவேணி, கவிதா, பா.துர்கா ஆகியோருக்கு பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் சங்க நிர்வாகிகள் பொன்சிவராகவன், ஆர்.எஸ்.பாண்டியன், சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். திருச்செந்தூர் அரசு வக்கீல் சாஸ்திர திருச்செந்தூர் நகர சபை துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் ஆபேத்நேகோ நன்றி கூறினார்.

      • இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
      • திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

      திருப்பூர் :

      திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

      இதில் திருப்பூரை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்-அக்நெல் தம்பதியினர். இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர் ஆவர்.இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

      இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத் தேர்வில் இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல. மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் இரட்டைப்பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற் போல் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

      ×