என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Score"

    • விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
    • ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றம் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் நடைபெறும் .

    இத்தேர்வானது வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சென்னை நகரிலும் நடைபெறவிருக்கிறது.

    இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக நடைபெற உள்ளது.

    எழுத்துத்தேரவு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது.

    கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்ற வற்றை ஆராய்வதாக இருக்கும்.

    எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 என்ற முகவரிக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டெல் பவன். டேராடூன் (வங்கி குறியடு 01576) உத்தரகாண்ட் செலுத்ததக்க பொதுப்பிரிவினர் ரூபாய் 600- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555- க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

    இணையவழி மூலமாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழியான www. rimc.gov.in செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு ஆகியவை விரைவு அஞ்சல் வாயிலாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 –லிருந்து அனுப்பப்படும்.

    விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2023 அன்று பதினொன்றை வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    அதாவது அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

    மேலும் 01.07.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டடுப்பாட்டு அலுவலக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய சாலை பூங்கா நகர் சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
    • மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    கீழக்கரை

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. அதேபோல 10-ம் வகுப்பு ேதர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    இவர் 3 பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். 2-வது இடத்தை மகினா ரிம் 586 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை பாத்திமா ருபைனா 575 மதிப்பெண்ணும், 4-வது இடத்தை ஆயிஷா லுபினா 574 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் 19 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 20 பேர் 550க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி அல்மாசாவிற்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் ஊக்கத்தொகையாக பள்ளி சார்பில் ரூ.10 ஆயிரம், மேலத்தெரு தொழிலதிபர் சிராஜ் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ராஜா தட்சணா 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். 2-வது இடத்தை மாணவர் மனோஜ் 473 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை மாணவர் முகம்மது இர்பான் 462 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    22 மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×