search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசாஜ்"

    • பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது.

    பிசியோதெரபி என்பது ஒரு சுகாதார பாதுகாப்பு தொழிலாகும், இது மசாஜ், வெப்ப சிகிச்சை, உடற்பயிற்சி, மின் சிகிச்சை, நோயாளி கல்வி மற்றும் காயம், நோய் அல்லது குறைபாடு சிகிச்சைக்கான ஆலோசனை போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.

    பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது. பிசியோதெரபி பல்வேறு நிலைமைகளை மிகவும் பயனுள்ள மற்றும் பொருத்தமான வழியில் சமாளிக்க உதவுகிறது. பல்வேறு துணை சிறப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளின் பட்டியல்:

    நரம்பியல் பிசியோதெரபி - நரம்பியல் நிலைமைகள் தீவிர தசை பலவீனம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு, தசை பிடிப்பு, நடுக்கம், செயல்பாடு இழப்பு மற்றும் உணர்வு குறைதல். நரம்பியல் பிசியோதெரபி என்பது பக்கவாதம், முதுகுத்தண்டு காயங்கள், அதிர்ச்சிகரமான மூளை காயங்கள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், சியாட்டிகா, அனியூரிசம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பு மற்றும் நரம்புத்தசை அமைப்பில் இருந்து உருவாகும் இயக்கம் மற்றும் செயல்பாட்டு கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    எலும்பியல்/ தசைக்கூட்டு பிசியோதெரபி - தசைகள், தசைநார்கள், எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைநாண்களை சரிசெய்வது உள்ளிட்ட மனித தசைக்கூட்டு அமைப்பு தொடர்பான குறைபாடுகளை சரிசெய்தல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பது. இதன் முக்கிய நோக்கம் வலியை குறைப்பது மற்றும் எலும்பு காயத்தை சரிசெய்வதாகும்.

    கார்டியோபுல்மோனரி பிசியோதெரபி - இதயத்தடுப்பு மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற இதய நுரையீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த துணை சிறப்பு சிகிச்சை அளிக்கிறது. பிசியோதெரபிஸ்டுகள் இருதய மறுவாழ்வு மையங்களை நடத்துகிறார்கள் மற்றும் நோயாளிகளுக்கு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சில வகையான பயிற்சிகள் மற்றும் பயிற்சி நுட்பங்களை பற்றி அவர்களுக்கு கற்பிக்கிறார்கள்.

    குழந்தைகளுக்கான பிசியோதெரபி - குழந்தைகளுக்கான பிசியோதெரபிஸ்ட்கள் கடுமையான காயங்கள், பிறக்கும் போது இருக்கும் குறைபாடுகள், உடல் வளர்ச்சியில் தாமதம், அல்லது பெருமூளை வாதம் போன்ற சில மரபணு குறைபாடுகளை மேம்படுத்த உதவுகிறார்கள். பிசியோதெரபிஸ்டுகள் குழந்தைகளில் பல்வேறு சிகிச்சை பயிற்சிகளை பயன்படுத்துகின்றனர். இது பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் அந்த பகுதிகளின் துல்லியமான மற்றும் ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்துகிறது.

    முதியோர் பிசியோதெரபி - கீல்வாதம் (மூட்டுகளில் வலி), ஆஸ்டியோபோரோசிஸ் (உடையக்கூடிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள்) போன்ற வயது தொடர்பான சில மருத்துவ நிலைகளை கையாள்கிறது. முதியோர் பிசியோதெரபிஸ்டுகள் முதியோர்களுக்கு வலியை அதிகரிக்கக்கூடிய சில அசைவுகளை கட்டுப்படுத்தி, நோயாளிகளுக்கு நடை உதவியாளர்களை வழங்கி ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்தவும், பல்வேறு நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்தி வலியை குறைக்கவும் வழிகாட்டுகிறார்கள்.

    • ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.
    • நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.

    ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது.

    அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் கூந்தல் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது. தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.

    முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும். ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக செய்ய வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் செய்ய வேண்டும்.

    கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை துடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் செய்யவேண்டும். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும். கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல கிடைப்பதை காணலாம்.

    கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.

    • கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம்.
    • குளிர்காலத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.

    இந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

    மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும்.

    இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

    அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும்.

    அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.

    தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை

    கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

    அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

    • உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும்.
    • சரும ஆரோக்கியம் மேம்படும்.

    நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளை களையவும் எண்ணெய் குளியல் அவசியம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது, சித்த மருத்துவம்.

    சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம்.

    செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும். மனதை அமைதிப்படுத்தும்.

    சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்கு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை பிரச்சினை, ரத்தக் குறைவு போன்ற நோய்கள் விலகும். சளி, இருமல், சைனஸ் போன்ற கப நோய்களை போக்கச் சுக்கு தைலத்தால் தலைக்கு குளிக்கலாம்.

    அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும். உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, வாத நோய்கள் குணமடையும். மன அழுத்தம் குறையும்.

    எண்ணெய் குளியல் நாளன்று அசைவ உணவுகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று, உடல் சற்று பலமிழந்து காணப்படுவது இயற்கையே.

    எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

    • ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும்.
    • வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் நல்லது.

    முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது. பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

    1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.

    2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.

    மறக்கக்கூடாதவை

    1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.

    2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.

    3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

    4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.

    • முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை.
    • சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்க மசாஜ் உதவும்.

    முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.

    மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

    முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

    பஞ்சில் கிளென்சிங் மில்க் அல்லது தயிர் தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நர்ஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நர்ஸிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.

    கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நர்ஸிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

    மசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.

    பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் அது வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

    மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.

    • தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும்.
    • சுருக்கங்கள் மறையும்.

    சரும பராமரிப்புக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகும். வேலைப்பளு, அலைச்சல் போன்ற காரணங்களால் உடலும், மனமும் சோர்ந்து இருக்கும்போது ஐஸ் கட்டியை முகத்தில் மென்மையாகத் தேய்த்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

    தக்காளி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாறை ஐஸ் டிரேயில் நிரப்பி, கட்டியாக மாற்றியும் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் பயன்களை தெரிந்துகொள்வோம்.

    சருமப் பொலிவு அதிகரிக்கும்:

    வெயில், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால், முகத்தில் அழுக்குப் படிந்து பொலிவு குறையும். ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.

    சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். பாலை, ஐஸ் டிரேயில் ஊற்றி உறைய வைத்து, அந்த ஐஸ் கட்டியை மென்மையாக முகத்தில் தேய்க்கலாம். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரிக்கும்.

    பேஸ் பேக், பேஸ் மாஸ்க் போன்றவற்றை முகத்தில் தடவுவதற்கு முன்பு, ஐஸ் கட்டியால் சருமத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் தோலின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

    கரு வளையம் நீங்கும்:

    கண்களுக்குக் கீழ் உருவாகும் கருவளையம் முகத்தின் அழகைக் கெடுக்கும். ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து ஐஸ் டிரேயில் உறைய வைக்கவும். இந்த ஐஸ் கட்டியை கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கும். அதிக வேலைப்பளுவால் ஏற்படும் கண் சோர்வுக்கு இது சிறந்த நிவாரணி. ஐஸ் கட்டியை கண்களின் உள் மூலையில் இருந்து, புருவங்களை நோக்கி வட்ட வடிவ இயக்கத்தில் தடவ வேண்டும். இதனால் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

    முகப்பருவைக் குறைக்கும்:

    ஐஸ் கட்டியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, முகத்தில் வரும் பருக்களைப் போக்கும். இதைத் தொடர்ந்து தடவி வரும்போது, சருமத்தில் அதிகமான எண்ணெய் உற்பத்தி கட்டுப்படும். சருமத் துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும். சுருக்கங்கள் மறையும்.

    உதடுகள் மென்மையாகும்:

    வறட்சியால், வெடிப்பு ஏற்பட்டு உதடுகள் உலர்ந்து இருக்கும். ஐஸ் கட்டியை உதட்டின் மீது மென்மையாகத் தடவி வந்தால், சருமம் நீரேற்றம் அடைந்து மென்மையாகும்.

    • இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
    • சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

    ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு

    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

    கண் சுருக்கங்கள்

    ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.

    தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

    • குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
    • பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.

    பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.

    குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும்.

    குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

    சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

    குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .

    • ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
    • ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

    சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    தேவையானவை: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, மென்மையான பருத்தி துணி, வெந்நீர்

    செய்முறை: உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்யவும். மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தித் தேய்க்கவும். இப்போது, பருத்தி துணியை வெந்நீரில் நனைக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.

    துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைக்கவும். இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்குப் பதிலாக, எண்ணெய்யை அகற்றுவதுபோல் அழுத்தி மசாஜ் செய்யவும். அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.

    • பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது.
    • உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    பலருக்கும் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இதற்காக மசாஜ் சென்டர் செல்ல தயங்கிவருகின்றனர். அதற்குக் காரணம், பாடி மசாஜ் அல்லது ஸ்பாவால் ஏற்படும் நன்மைகளையும், அதன் செயல்முறைகளையும் அறியாததுதான்.

    பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது. பாடி ஸ்பா சிறந்த மருத்துவ முறையாகும். வாசனை எண்ணெய்கள் அல்லது கிரீம்களுடன் மசாஜ் செய்கையில், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி தோல் செல்களில் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற உபயோகமாக அமைகிறது.

    பாடி ஸ்பா தசை இறுக்கம், சோர்வைப் போக்க உதவுகிறது. அதன் காரணமாகத்தான், பெரும்பாலானோர் பாடி ஸ்பாவில் சொக்கி தன்னை மறந்து தூங்குகின்றனர். இதனால் சருமத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது.தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மன அழுத்தம், கவலையைக் குறைக்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இவ்வாறு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்ய பல எண்ணெய்கள் உள்ளன.

    பெரும்பாலும் அனைவரும் உபயோகிப்பது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான். ஆனால் இவை மட்டுமின்றி, இன்னும் நிறைய எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்ய பயன்படுகின்றன. இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம்.

    • ஆலிவ் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
    • பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    ஆன்டி-ஆக்சிடண்டுகள்:

    ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

    மாய்ஸ்சுரைசர்: ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

    சரும பிரச்சினைகளை நீக்குதல்: ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பளபளப்பாகக் காட்சி தரும்.

    ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

    அழற்சியைக் குறைத்தல்: ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக 'எக்ஸ்ட்ரா வெர்ஜின்' ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    ×