search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ம.தி.மு.க."

    • நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.

    இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
    • நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகர் பகுதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அடுத்த மாதம் 16-ந்தேதி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொள்ளும் 5 ஆயிரம் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, பூபதி, இளைஞரணி செயலாளர் சதீஸ்குமார், வழக்கறிஞரணி துணை செயலாளர்கள் கந்தசாமி, அன்பழகன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி, மாணவரணி அமைப்பாளர் தாமோதரன், நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். பின்னர் ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.

    இதைத்தொடர்ந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளின் அட்ட காசம் அதிகமாக உள்ளது.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியிடம் பேசினேன். தி.மு.க. அரசு, வனத்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைத்துள்ளனர். இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலத்திலும் காட்டுப்பன்றி களின் தொல்லை அதிகம் உள்ளது.

    1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி 6 அட்டவணை உள்ளது. இதில் காட்டுப்பன்றி 3-வது அட்டவணையில் உள்ளது. 5-வது அட்டவணையில் உள்ள விலங்குகளை யார் வேண்டுமானாலும் அழிக்கலாம். ஏனென்றால், அது மனிதர்களுக்கு, விவசாயத்திற்கு தொல்லை கொடுக்கக் கூடியது. எனவே, அந்த 5-வது அட்டவணையில் காட்டுப்பன்றிகளை சேர்க்க வேண்டும்.

    காட்டுப்பன்றியை 5-வது அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என கேரள மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது சாத்தியப்படாது என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. இதே மத்திய அரசு, உத்தரப்பிரகேசம், பீகார் மாநிலங்களில் காட்டுப்பன்றி களை அட்டவணை 5-க்கு மாற்றி, ஓராண்டு நடைமுறைப்படுத்தியது. அந்த ஓராண்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

    கேரளாவில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கிராமக்குழுக்களை கொண்டு காட்டுப்பன்றி களை வேட்டையாடலாம் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், ம.தி.மு.க. ஒன்றிய செயலர்கள் கேசவ நாராயணன், சரவணன், மாரிச்சாமி, நகர செயலர் பால்ராஜ், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவி விஜயலட்சுமி, நிர்வாகிகள் சிவகுமார், கோடையிடி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம், வன ராஜன், முத்துபாண்டியன், நாகராஜன், லியோ செண்பக ராஜ், கணேசன், பவுன்மாரியப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்
    • வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோரை சந்தித்து ஜெயசீலன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூரில் உள்ள காந்தி, அம்பேத்கார் ஆகியோரது உருவ சிலைக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் செல்ல கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாரும், பேரூராட்சி கவுன்சிலருமான ரபியுதீன், ஆசிரியர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • சிவகாசியில் ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • துரை வைகோ இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசியில் நடைபெற்ற ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்ட மன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமை தாங்கினார். சிவகாசி நகரச் செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ராஜேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிவகாசி மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் வெளிவந்துள்ள வைகோ ஆவண திரைப்படம் வருகிற 10-ந் தேதி சிவகாசி கணேஷ் தியேட்டரில் திரையிட உள்ள நிலையில் நிர்வாகிகளும் பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் முடிவு செய்யப்பட்டது.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. நாகராஜ், கவுன்சிலர்கள் திவாகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர்.நாகராஜன் தலைமையில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்.நேமிநாதன்,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி, மாமன்ற உறுப்பினர் குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல்,மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்னசாமி,தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகோபால் மற்றும் பகுதி செயலாளர்கள் ,ஒன்றியச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தக்கொண்டனர்.

    • ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் அவை தலைவர் நேமிநாதன், பொருளாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • வைகோ ‘இளமுகில்’ வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. புதிய அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகர் ஈ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து பேசுகிறார். இதையடுத்து காலை 11 மணிக்கு தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோரின் புதிய அலுவலக கட்டிடம் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் பல்லடம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.காதர் சலிமா திருமண மண்டபத்தில் நடைபெறும் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் வைகோ கலந்து ெகாள்கிறார். இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்புரையாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ம.தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது
    • உறுப்பினா் சோ்க்கை குறித்து விளக்கிப் பேசினா்

    அரியலூா்:

    அரியலூரில் அரியலூா் - பெரம்பலூா் மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சகாதேவன் தலைமை வகித்தாா். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் வரதராஜன், துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பணி துணைச் செயலா் செந்தில் குமாா், மதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா ஆகியோா், கட்சியின் உறுப்பினா் சோ்க்கை குறித்து விளக்கிப் பேசினா். கூட்டத்தில், நகரச் செயலா் மனோகரன் மற்றும் அரியலூா், பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக அரியலூா் மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

    ×