search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.-ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை
    X

    தி.மு.க. சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைைமயில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள். ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    தி.மு.க.-ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. நாகராஜ், கவுன்சிலர்கள் திவாகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர்.நாகராஜன் தலைமையில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்.நேமிநாதன்,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி, மாமன்ற உறுப்பினர் குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல்,மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்னசாமி,தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகோபால் மற்றும் பகுதி செயலாளர்கள் ,ஒன்றியச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தக்கொண்டனர்.

    Next Story
    ×