search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Secratary"

    • ம.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • வைகோ ‘இளமுகில்’ வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. புதிய அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகர் ஈ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து பேசுகிறார். இதையடுத்து காலை 11 மணிக்கு தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோரின் புதிய அலுவலக கட்டிடம் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் பல்லடம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.காதர் சலிமா திருமண மண்டபத்தில் நடைபெறும் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் வைகோ கலந்து ெகாள்கிறார். இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்புரையாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    • வேலுச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    உடுமலை :

    உடுமலை தி.மு.க. நகர செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் சி. வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சே. செல்வராஜ், சொர்க்கம் பழனிச்சாமி, உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், முன்னாள் அமைப்பாளர் குமார்சந்திரன், ஆர். டி. எஸ். தனபால், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி, ரீகன், சாந்தி கிருபாகரன் உள்ளிட்டோர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×