search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் குவிப்பு"

    • கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகி ருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைக்கு சத்ரபதி வீரசிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பா கத்தை உடைத்து உள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டுத்தீ போல் பரவியது. இதை யடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர், அனைத்து தரப்பினர் இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • இங்கு வந்து வழிபடவும், இந்த இடத்தை சொந்தம் கொண்டாவும் யாருக்கும் உரிமை இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூரில், 2 பேரிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த சிலர் இடத்தை வாங்கியுள்ளனர்.

    இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள, பல சென்ட் நிலம் தங்களது வழிபாட்டு தளம் எனவும், இதற்கு சென்று வர, பிறர் வாங்கி வழித்தடத்தில் உரிமை உள்ளது என, கோரி வந்தனர்.

    இது தொடர்பாக, தருமபுரி டி.ஆர்.ஓ., அனிதா தலைமையில் நடந்த விசாரணையில், இந்த இடம், 108 ஆண்டுகளுக்கு முன் தருமபுரியை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இதில், பிறருக்கு பாத்தியம் இல்லை என உத்தரவிட்டார்.

    மேலும், இது தொடர்பாக, இந்த பகுதியில் நிலம் வாங்கியவர்கள், வழிபாடு செய்பவர்கள் தங்களுக்கு இதில், எதிர்ப்பு இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று, பிரச்சனைக்கு உரிய இடத்தில், வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பென்னாகரம் டி.எஸ்.பி., இமயவர்மன் தலைமையில், இண்டூர், பாப்பாரப்பட்டி போலீஸ் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இரு தரப்பினரிடம், டி.எஸ்.பி., இமயவர்மன், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர், அனைத்து தரப்பினர் இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதில், டி.ஆர்.ஓ., உத்தரவுபடி இந்த இடம் தருமபுரியை சேர்ந்தவருக்கு சொந்தமானது ஆகும். எனவே, இங்கு வந்து வழிபடவும், இந்த இடத்தை சொந்தம் கொண்டாவும் யாருக்கும் உரிமை இல்லை.

    இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்றால், டி.ஆர்.ஓ., அறிவுரைபடி செயல்பட வேண்டும். அதுவரை, இந்த இடத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட கூடாது.

    இங்கு வரக்கூடாது என, அறிவுறுத்தினார்கள். இதையடுத்து, அனைத்து தரப்பினரும் அங்கிருந்து சென்றனர். ேமலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது26). இவர் புல்ல நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றது.

    இதையடுத்து அருகில் விசாரித்து ரவி என்பவரி டம் சென்று பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு அவர் இங்கு பெட்ரோல் கிடைக்கும் என யார் சொன்னது என விசாரித்த தாகவும், இதுகுறித்து இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு வரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.

    இவர்களின் வாக்கு வாதத்தை கேட்டு இருவருக்கும் தெரிந்த நபர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கலைந்து செல்லும் போது ஒரு தரப்பினர் மேலையூர் கிராமத்தில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சரவணகுமார் அளித்துள்ள புகாரில், ரவி தரப்பினர் தங்களிடம் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தரப்பில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் சரவண குமார் தரப்பினர் வீட்டுக்குள் புகுந்து பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு களை கூறி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பரளச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் நிலையில் 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது.
    • ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தது.புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு திரண்ட பா.ஜ.க. வினர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்–க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். அதேபோல் பா.ம.க. வினர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவிற்கு சிலை வைக்க வேண்டும் என தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். இந்த நிலையில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் அங்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ் வாசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.எ்ன்.ஏ., தமி்ன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    அப்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.க, பா.ம.க. வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பின ரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பா விதம் ஏற்படாமல் தடுக்க டி.எஸ்.பி. மித்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, செல்வராஜி ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஆர்.ஐ., சாந்தி, மாயாவதி ஆகியோர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக தலை வர்கள் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கலாம். அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை வைக்க இயலும் என தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் அங்கு பேசி முடிவு மேற்கொள்ள லாம் என தெரிவித்தனர். தலைவர்கள் சிலை வைக்க இடம் பிடிப்பதில், கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர்.
    • பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசெல்வம்.(வயது 47). விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உக்கிரவேல் என்பவருக்கும் வீட்டுமனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர். படுகாயம் அடைந்த ஞானசெல்வம் பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு நிலைமை மோசமாக ஞானசெல்வம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. ஆத்திரம் அடைந்த ஞானசெல்வத்தின் உறவினர்கள் உடலை உக்கிரவேல் வீட்டுமுன்பு வைத்து போராட்டம் செய்தனர். இந்த பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகோபால் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் சமரசம் ஆகவில்லை. இதனால் அங்குபதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

     கடலூர்:

    கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி‌.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர்‌. அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.

    பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்

    நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது‌. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்து. இந்த பஸ் வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது வயலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் பஸ்சில் ஏறி சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்செய்தனர்.

    இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சின்னவடவாடி கிராம த்தைச் சேர்ந்த மாணவனு க்கும், வயலூரை சேர்ந்த மாண வனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளியில் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வயலூரை சேர்ந்த வாலிபர்கள், பஸ்சில் வந்த மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதுகுறித்து சின்ன வடவாடியை சேர்ந்த பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த்(20), ராஜேஷ்(23), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும்.
    • அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    சி.ஐ.டி.யு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும். அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் முருகன் கண்டன உரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • திருச்சி அருகே ஏற்பட்ட திடீர் கோஷ்டி மோதலால் பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்
    • சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப் -இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் அருகிலுள்ள கல்லக்குடி நடுத்தெருவில் வசித்து வருபவர் கங்காதரன் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி பால் என்கின்ற பாலசுப்ரமணியன்.

    இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சார்ந்த காமராஜ், சேகர், கவியரசன், மணிகண்டன், பிரேம்குமார், கிருஷ்ணவேணி, விஜயா, ஹேமலதா, ராஜாங்கம் மற்றும் இரண்டு பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயனுக்கும் காமராஜ் குடும்பத்திற்கும் இடையே கடந்த 15 நாட்களுக்கு இறந்தவர் ஊர்வலம் சென்ற பொழுது வெடி வைத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி இருவரும், காமராஜ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களிடம் எதற்கு என்னுடைய வீட்டுக்கு முன்னால் வெடி வைத்தீர்கள். இதனால் உடல் நலக்குறை காரணமாக இருந்த எனது அப்பா இறந்து விட்டார் என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

    அதனால் ஆத்திரமடைந்த காமராஜ் குடும்பத்தினர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பியை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    ேமலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காமராஜின் மனைவி கிருஷ்ணவேணியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கல்லக்குடி கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வரும் காமராஜின் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனால் கல்லக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர்.
    • முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தபள்ளி மாணவர்கள் அக்கட வல்லி பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

    இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடை ந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை க்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.

    இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.

    தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    ×