search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு பிரிவினரிடையே மோதல்  பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு
    X

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.

    இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.

    தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×