search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக  தாக்கிய  3 பேர் கைது
    X

    விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது

    • விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்து. இந்த பஸ் வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது வயலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் பஸ்சில் ஏறி சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்செய்தனர்.

    இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சின்னவடவாடி கிராம த்தைச் சேர்ந்த மாணவனு க்கும், வயலூரை சேர்ந்த மாண வனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளியில் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வயலூரை சேர்ந்த வாலிபர்கள், பஸ்சில் வந்த மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதுகுறித்து சின்ன வடவாடியை சேர்ந்த பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த்(20), ராஜேஷ்(23), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×