search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரு பிரிவினர் மோதல்"

    • புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
    • மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர்.

    கடலூர்:  

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்தவர்கள் நசின்ராஜ், ராஜா. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவ்விருவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் படித்து வருகின்றனர். இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் கடந்த 5-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவி த்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.

    இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது துறையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜா தரப்பினரக்கும், அவ்வழியே வந்த நசின்ராஜ் தரப்பிற்கும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர். அப்போது சமாதானம் செய்ய வந்த போலீசார் எதிரிலியே இருதரப்பும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் திட்டக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதானம் பேசி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராஜாவின் உறவினரான துறையூர் கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். துறையூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் 50-பேர் மீதும், நசின்ராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் 37-பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு தரப்பி லும் தலா ஒருவரென 2-பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடலூர் எஸ்.பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின் தலைமையில் தனிப்படை அமைத்து, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர்.
    • தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடியைச் சேர்ந்த நாத்திகன் என்பவரது மகன் நசின்ராஜ், அதே பகுதியில் உள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் ராஜா. இவ்விருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் இருவரும் படித்து வருகின்றனர். தங்களது கிராமத்திலிருந்து பஸ்சில் ஐ.டி.ஐ.,-க்கு சென்று வருவர். அப்போது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.

    இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.

    இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் நேற்றிரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அது சமயத்தில் துறையூர் பஸ் நிறுத்தத்தில் ராஜா தரப்பினர் நின்று சம்பவம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூரில் உள்ள நசின்ராஜ்-ன் சமூகத்தை சேர்ந்த ஒரு நபர், ராஜா தரப்பினரை ஜாதியை சொல்லி தகாத வார்த்தையில் (அசிங்கமாக) திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர். தகவலறிந்த துறையூரைச் சேர்ந்த இரு சமுகத்தினரும் துறையூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த பெண்ணாடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்கு கட்டுப்படாத இரு தரப்பும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, சுப்பரமணியன், கோதண்டராமன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு துறையூரைச் சேர்ந்த இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருபிரிவினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் சக்திகணேசன், இரு சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தார். மேற்கொண்டு தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜாவின் உறவினரான துறையூர் தி.மு.க. கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் மின் கசிவினால் வீடு தீப்பிடித்ததா, யாரேனும் கொளுத்தி விட்டனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    ×