search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து கழகம்"

    • கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?
    • இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவ- மாணவிகள் ஏராளமானோர் நாகர்கோவில் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    இதனால் தினமும் காலை நேரங்களில் அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, சாமிதோப்பு, பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், தக்கலை, சுங்கான்கடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு மாணவ-மாணவிகளும் நாகர்கோவில் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிறார்கள்.

    இதனால் அரசு பள்ளிகளில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று காலையில் ஆரல்வாய் மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர். மாணவிகளும் படிக்கட்டில் தொங்கியபடி பஸ்ஸில் வந்தனர்.

    படியில் பயணம் நொடியில் மரணம் என்பார்கள். ஆனால் மாணவிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்தது பார்ப்பவர்களை பதற வைத்தது. மாணவ-மாணவிகள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை அந்த வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் ராமன் புதூர் பகுதியிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். பாலிடெக்னிக் மாணவர்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. எனவே டிரைவர், கண்டக்டர்கள் மாணவ- மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை ,மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    குமரி மாவட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இதேபோல் அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்து செய்யும் மாணவ-மாணவிகளை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து பள்ளி கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ-மாணவிகள் அண்ணா பஸ்நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலையை நீடித்து வருகிறது. இதை கண்காணித்து போக்குவரத்து கழக அதிகாரிகளும் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • தி.மு.க. அரசு செய்தாலே, ஐந்து லட்சம் குடும்பங்களின் வாழ் வாதாரம் மேலோங்கும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்பி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதனை தி.மு.க. அரசு செய்தாலே, ஐந்து லட்சம் குடும்பங்களின் வாழ் வாதாரம் மேலோங்கும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசு தாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இன்று நடைபெற்றது.

    அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மேயர் சரவணன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனை யாக்கியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்ப லன்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    14-வது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரி செய்து கொண்டிருக்கிறார்.

    கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு பேசும்போது, அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சென்றால் பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்று முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். சாமானியர்களுக்கு வேலை கிடைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றார்.

    விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ்சில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்படுகிறது. எனவே இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.

    48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் இருக்கும் நிலையில் ரூ.111 கோடியே 95 லட்சம் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

    • பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் நிம்மதி
    • பொதுமக்கள் பாராட்டு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மடவாளம் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்பு (வயது 45) ஓட்டி வந்தார்.

    மங்களம் கூட் ரோடு அருகே வந்தபோது டிரைவ ருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது.

    சமாளித்தவாறே ஒரு வழியாக ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததும் பஸ்சை நிறுத்தி னார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தண்ணீர் தெளித்து கண்டக்டர் எழுப்பி ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    டாக்டர் சுமிதா அவரை பரிசோதனை செய்ததில் ரத்த கொதிப்பு அதிகமாக இருந் தது. மேலும் சர்க்கரை வியாதி இருந்தது தெரியவந்தது. இத னால் தான் டிரைவருக்கு தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

    இதனையடுத்து சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க கூறி னார். இது சம்பந்தமாக திருப்பத் தூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    மாற்று டிரைவர் இல்லாத தால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் நீங் களே பஸ்சை ஓட்டி வாருங் கள் என டிரைவர் அன்புவி டம் கூறிவிட்டனர்.

    சற்று நேர ஓய்வுக்கு பின் பஸ்சை டிரைவர் அங்கிருந்து பயணிகளுடன் திருப்பத்தூருக்கு ஒட்டி வந்தார். தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர் எனினும் சற்று தொலைவு கழித்து ஆபத்தான கொண்டை ஊசி விளைவு பகுதியில் வரும்போது மயக்கம் ஏற்பட்டு இருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் சாமார்த்தியமாக செயல்பட்டு பஸ்சை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தியதால் விபரீதம் தவிர்க்கப் பட்டது.

    இதனால் பயணிகள் தாமதம் ஆனாலும் டிரைவரின் சாமார்த்தி யத்தை பாராட்டி நன்றி தெரிவித்து நிம்மதி அடைந்தனர்.

    • ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    அரசின் தலைமைச் செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதனை ஏற்றுக் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின் பேரில் தினமும் ஒரு திருக்குறள் என்ற பலகை வைக்கப்பட்டது.

    அதில் தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்கான விளக்கமும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது.
    • சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது.

    ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

    குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • தருமபுரியில் இருந்து பெருநகரங்களுக்கு நேரடி பயணம் மேற்கொள்ள வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வைக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவை துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப் பட்டது.

    சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

    இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.

    அரசு விரைவு பேருந்துகளில் குளிர்சாதனம் இல்லாத பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன தூங்கும் வசதியுடன் பயணிக்கும் பேருந்து என ஆறு வகை உள்ளது.

    சென்னையில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் விரைவு போக்குவரத்து கழகம் தங்களது சேவையை செய்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் NH 7 தேசிய நெடுஞ்சாலையை NH 44 என்று பெயர் மாற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் போது தருமபுரி நகரப் பகுதிக்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தில் செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

    அதன் பிறகு கன்னியா குமரி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரும் நகரங்களில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி நகரத்தை புறக்கணித்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்கிறது. அதே மார்க்கத்தில் மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக தருமபுரி நகரப் பகுதிக்குள் வராமல் தென்னக நகரப் பகுதிகளுக்கு செல்கிறது.

    தருமபுரி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் பேருந்து நிலையமாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

    தருமபுரியில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் ராமநாதபுரம் உள்ளிட்ட நீண்ட தூர நகரங்களுக்கு செல்ல தருமபுரி பஸ் நிலையத்திலிருந்து சேலம் சென்று சேலத்தில் இருந்தும் மதுரை சென்று மதுரையில் இருந்து பேருந்து பிடித்து முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கும், அரசு பணிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பெங்களூரு நகரத்திலிருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் பேருந்துகள் நகரப் பகுதிக்குள் வருவதில்லை. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து தருமபுரி மாவட்டத்தில் அரசு பணிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் பொதுமக்கள் தருமபுரியில் இருந்து பெருநகரங்களுக்கு நேரடி பயணம் மேற்கொள்ள வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் தருமபுரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வழியாக தான் வட பகுதியில் இருந்து தென் மாவட்டங் களையும் கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தட மாவட்டமாக தருமபுரி மாவட்டம் அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்தில் வியாபார நோக்கமாக வட மாநிலத்தவர்களும் அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகமானோர் தென் மாவட்டத்தினரும் பணி செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் விவசாயத்தில் சிறந்த மாவட்டமாக இருந்து வருவதால் தினமும் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நெடுந்தூர பயணங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வருகிறது. ஒருவேளை தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பதாலோ போக்குவரத்து வசதியிலும் பின் தங்கி இருக்க வேண்டும் என்று நினைத்து விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வைக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது.

    மேலும் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான், பண்டிகை காலங்களில் தொலைத்தூர பயணத்திற்கு நேரடி பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட மாநில மக்களுக்கு தொலைத்தூர பயணிக்க விரைவு போக்குவரத்து கழக பேருந்து வசதி வேண்டும் என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக பெங்களூர் செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தருமபுரி மாவட்ட பயணிகளுக்கு ஆன்லைனில் புக் செய்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் வகையில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
    • மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் ஏராளமான காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்கி உள்ளது. நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.

    அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.

    • அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது.
    • ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்கமாட்டார்கள்.
    • பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகள் சாப்பிட வசதியாக வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பஸ்சை நிறுத்துவது வழக்கம்.

    அப்போது அந்த உணவகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு இடம் இருக்கும். அங்கு சென்று தான் டிரைவர்-கண்டக்டர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்கமாட்டார்கள். ஆனால் பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

    இதுகுறித்து பல்வேறு புகார்கள் போக்குவரத்து கழகத்துக்கு சென்றது. இதைத் தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    டிரைவர்- கண்டக்டர்களுக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ்சில் தொங்கி பயணிப்பதை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விதிகளை பின்பற்ற மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை மாநகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பாதுகாப்பாற்ற முறையில் பயணம் செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மாணவர்கள் படிக்கட்டிலும், பக்கவாட்டிலும் தொங்கி பயணம் செய்வது தொடர்கிறது. இதனால் பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ்சில் தொங்கி பயணிப்பதை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விதிகளை பின்பற்ற மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளார்.

    வழித்தடங்களில் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ, உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி பாதுகாப்பாற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    மாணவர்கள் டிரைவர், கண்டக்டர் பேச்சை கேட்காமல் மீறி செயல்பட்டு நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் பஸ்சை நிறுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அவசர எண் 100-க்கோ புகார் தெரிவிக்க வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.
    • இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

    திருப்பூர் :

    அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் கீழ்திருப்பூர் மண்டலம் உள்ளது. உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளன.மாவட்டத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் எனநாள் ஒன்றுக்கு 559 பஸ்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகிறது.ஆனால் ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக தற்போதுள்ள டிரைவர், கண்டக்டர்களே தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.குறிப்பாக சில கிராம வழித்தடங்களில் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்களை நம்பி பயணிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இது குறித்து டிரைவர்கள் சிலர் கூறியதாவது:- கடந்த ஆட்சியின் போது ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.இதனால்ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஏற்கனவே தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீண்டும் பஸ்களை இயக்க முற்படுவதால் போதிய ஓய்வின்றி, மன அழுத்தம், உடல் நலக் குறைவுக்கு உட்படுகின்றனர்.காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து அரசு பஸ்கள் தடையின்றி இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×