search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறல்"

    • ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    அரசின் தலைமைச் செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதனை ஏற்றுக் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின் பேரில் தினமும் ஒரு திருக்குறள் என்ற பலகை வைக்கப்பட்டது.

    அதில் தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்கான விளக்கமும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    ×