search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பேற்பு"

    • கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • விருதுநகர் மாவட்ட ஆவின் தனி அதிகாரியாக கலெக்டர் பொறுப்பேற்றார்.
    • கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22-ல் 2 மேலாளர்கள், 5 துணை மேலாளர்கள், 8 டிரைவர்கள் உள்பட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால்வளத்துறை சார்பு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு 2022ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மார்ச் 16-ந்தேதி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    • கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பொறுப்பேற்றார்.
    • இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ., என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று கானா துணை தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    கானாவில் உள்ள அக்ராவில் உலக தினை தினம் கொண்டாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட் குழும இயக்குநர் மற்றும் வணிக மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டனர்.

    வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் பெரியசாமி கூறியதாவது:-

    மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன்
    • விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டவிழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    விழுப்புரம்,:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் பழனி நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:  புதியதாக பொறுப்பேற்க உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், பொது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்அ ப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவளம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.மணி பணி மாற்றம் செய்யப்பட்டார்.
    • பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.வள்ளி சத்தியமூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் மற்றும் முதல்வராக டாக்டர் மணி பணியாற்றி வந்தார். அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் வள்ளி சத்திய மூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    இதை தொடர்ந்து அவர் மருத்துவ கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

    முதல்வராக பொறு ப்பேற்ற டாக்டர் வள்ளி சத்தியமூர்த்திக்கு கல்லூரி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள், மாணவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரி வித்தனர்.

    • திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாவட்டம் பூலுவப்பட்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த கனகராணி, திருப்பூர் மாவட்ட இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு மருத்துவ அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப் பேற்றுக்கொண்டார்
    • டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கரூர்

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வந்த முத்துச்செல்வன், சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கண் சிகிச்சை துறை பேராசிரியராக இருந்த சீனிவாசன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று காலை சீனிவாசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பொறுப்பேற்றுக்கொண்ட செயல் அலுவலர் சரவணனுக்கு கோயில் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    • தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்தவர்.
    • நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக பாா்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.இவருக்கு முன் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த குமரேசன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

    தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட பாா்த்திபன் குரூப் 1 தோ்வில் தோ்வாகி, வண்டலூா் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்த பின், சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தநிலையில், தற்போது நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழத்து தெரிவித்தனா்.

    • திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
    • காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் நிருபர்களிடம் கூறுகையில் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் காவலரை நியமனம் செய்து குற்றங்கள் நடக்காமல் இருக்க பணியாற்றுவேன் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் கொடுக்கும் புகாரை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கெடிலம் சேந்தநாடு களமருதூர் மடப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    • விழுப்புரம் மாவட்ட சட்ட ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் பொறுப்பேற்பு உள்ளார்.
    • அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.எஸ்.பியாக திருமால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப் பேற்பதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஏ.டி.எஸ்.பி.யாக பொறுப் பேற்றுள்ள திருமாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அமைச்சுத் துறைசார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ. எம் .ஏ. அரங்கில் நடந்தது

    உடுமலை :

    உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ. எம் .ஏ .அரங்கில் நடந்தது..முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார். மாவட்ட ஜெனரல் செகரட்டரி வரதராஜ் மாவட்ட கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ,ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ .கே .பி .எம். கார்த்திகேயன் ,உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன் ,சிறப்பு அழைப்பாளராக கோவை விஜிஎம். மருத்துவமனை சேர்மன் டாக்டர் மோகன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைவராக சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம், செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய தலைவர் சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார். முன்னாள் தலைவர் பொறியாளர் பாலமுருகன் ,செயலாளர் கே .ஆர் .எஸ் ,செல்வராஜ் ஆகியோர் ரோட்டரி சங்கம் ஆற்றிய சமூகப் பணி குறித்து பேசினர். மாவட்ட கவர்னர் இளங்குமரன் உலக அளவில் ரோட்டரி சங்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், ரோட்டரி சேவைகள் குறித்தும் பேசினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×