search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மறியல்"

    • அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கொருக்கை பகுதியில் அர்ஜுனன் காலனி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    இதே போல புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் முறையாக வருவதில்லை.

    இதுகுறித்து பலமுறை தலைவரிடமும், அதிகாரிகளும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கொருக்கை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து செய்யாறு போலீசார் மற்றும் கொருக்கை தலைவர் அருள் நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 19-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம் கே ஜி நகர், பாலாஜி லேஅவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி ஆகிய பகுதிக உள்ளன.

    இந்த பகுதிக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணபதி-துடியலூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இருப்பினும், அவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, எங்கள் வார்டின் கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மேயருமான கல்பனா ஆனந்தகுமார் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி அங்கேயே நின்றனர்.

    பின்னர் கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாசர், தொலைபேசி மூலம் போலீசாரிடம் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

    • ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாக புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து சுடுகாடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பணி நிறுத்தத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் கைனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் வழி யாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநி லங்களுக்கும், இதே போல் மறுமார்க்கத்தில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத் தின் பிற மாவட்டங்கள் மற் றும் கேரளா, கர்நாடகா மாநி லங்களுக்கும் ரெயில்கள் மற் றும் சரக்கு ரெயில்கள் செல் கின்றன.

    இதனால் அவ்வப்போது அந்த கேட் மூடியிருப்பதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த பகு தியில் சுரங்கபாதை அமைப்ப தற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங் கப்பட்டது.

    இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற் கான வரைபடத்தை காண் பித்து பணிகள் தொடங்கிய பின் இப்போது அந்த வரைப டத்தில் உள்ளது போல் இல் லாமல் வளைவாக மாற்றி அமைத்து வருகின்றனர்.

    இத னால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இந்த பணியை நிறுத்த வேண்டும். எனக்கூறி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் சண்முக சுந்தரம், ரெயில்வே இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்றார்.

    திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்று பள்ளி குழந்தைகள், முதியவர்கள் அந்த சாலையில் பரபரப்பாக செல்லும் நேரத்தில் கனரக வாகனங்கள், லாரிகள் அந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பும் ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்தநிலையில் லாரிகள், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
    • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

    கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை கீழ்நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த தோக்கவாடி ஹவுசிங் போர்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கரியமங்கலம் பகுதியில் இருந்து மின் இணைப்புகள் வழங்க ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கிராமப் பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்க ப்படுவதாகவும் அந்த சமயங்களில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டிலும் மின்தடை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    மின்தடை ஏற்பட்டால் பல மணி நேரம் கழித்து தான் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதா கவும் கூறி நேற்று இரவு திடீரென அப்பகுதி மக்கள் செங்கம்- திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. எனினும் இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

    • காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).

    இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும்.

    தென்திருப்பதி 4 ரோடு பகுதியில் இருந்து ஆலாங்கொம்பு 3 ரோடு வரை பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலையில் கழிவு நீர் ஓடுகிறது.

    இதனால் அந்த சாலை மேலும் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் குண்டும் குழியுமாக சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து உடனே சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் காரமடை பிள்ளுகடை முக்கில் இருந்து சிறுமுகை நீலிப்பாளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×