search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவரொட்டி கிழிப்பு"

    • சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. சுவரொட்டியை கிழித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் தினேஷ் பாபு (வயது 29), இவர் கச்சிராயபாளையம் சாலையில் கிருபா எலெக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று தனது கடை முன்பு ஒட்டப்பட்டிருந்த பாஜகவின் சுவரொட்டி கிழித்துள்ளார். அப்போது பாஜக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் 8 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பீர் பாட்டிலை கடை போர்டின் மீது வீசித் தாக்கினார். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறி ஓடியது.

    இது குறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் (39) கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நகரத் தலைவர் சத்யா, மற்றும் சங்கராபுரம் அருகே அவிரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் ஆகிய 2 பேர் மீதும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாஜக நகர தலைவர் சத்யா கொடுத்த புகாரின் பேரில் தினேஷ் பாபு, அவரது சித்தப்பா மற்றும் பாலசுந்தர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அனுமதி இல்லாமல் ஒட்டப்பட்ட சுவரொட்டியை கடைஉரிமையாளர் கிழித்த சம்பவம் குறித்து தனித்தனியாக 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×