search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Residents picket"

    • 19-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம் கே ஜி நகர், பாலாஜி லேஅவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி ஆகிய பகுதிக உள்ளன.

    இந்த பகுதிக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணபதி-துடியலூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இருப்பினும், அவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, எங்கள் வார்டின் கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மேயருமான கல்பனா ஆனந்தகுமார் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி அங்கேயே நின்றனர்.

    பின்னர் கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாசர், தொலைபேசி மூலம் போலீசாரிடம் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

    ×