search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
    X

    அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்

    • அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×