search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாராளுமன்றம்"

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
    • தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.

    #தமிழன்டா

    தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
    • சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    புதுடெல்லி:

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.

    இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாரதிய ஜனதா அரசு கட்டியுள்ளது. இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கவர்னர்களை அழைத்தது கிடையாது. பெரும்பான்மையுடன் இருக்கும் பிரதமர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற அறிக்கை வருத்தமளிக்கிறது.

    வருமான வரித்துறை சோதனை என்பது பொதுவானது. வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்கள் மீதும், கார்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    • ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகிறோம். சமீபத்தில் கவர்னருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கினார்.

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், துறை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர் உடன் இருந்தனர்.

    இதேபோல் ஆவடி, அன்னனூர், கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இடங்களையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

    பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.

    மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    ×