search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள் விழா"

    • மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் தொரை கொடியேற்றி வைத்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நகர துணை செயலாளர் ரீட்டாமேரி பர்னபாஸ், நகர பொருளாளர் அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், ஜெயராமன், மார்கெட் ரவி, தியாகு, சசிகுமார், ராஜன், அமலநாதன், மல்லிகொரை மூர்த்தி, தர்மராஜ், ஆல்துரை, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கஜேந்திரன், விஷ்னு, ரகுபதி, கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பர்னபாஸ், வெங்கடேஷ், ஸ்டான்லி, பாபுராஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், பௌ்ளன், செல்வம், காளி, மாதன், ராஜேஷ் மற்றும் இளைஞர் அணியினர் விவேக், மீன்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
    • குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி என். மோட்டூரில் தமிழகத முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபட்டது, இதனையடுத்து நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார் . மேலும் மத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் ,என் மோட்டூர் கிளை செயலாளர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் சக்திவேல், சங்கர், ராமமூர்த்தி, முன்னாள் கிளை செயலாளர் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், ராம்குமார், அன்பழகன், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில், மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெ.பி.என்ற ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவின் போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் கலாவதி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் சாக்கப்பா, கிருஷ்ணன், மற்றும் முகமது இப்ராகிம், சுரேஷ்பாபு, முத்துராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • காவிப்படை சொந்தங்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி தேசிய இளைஞர் தினம் ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமையில் கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் பெரியாம்பட்டியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி, இளைஞர் அணி தலைவர் மௌனகுரு மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ,இளைஞர் அணி விக்னேஷ் ஓ .பி. சி. அணி ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி, செயற்குழு உறுப்பினர்கள் அன்பு மற்றும் அருள், கிளை தலைவர்கள் சபரி, ஜீவானந்தம், செந்தில் வேல், அருள், ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர். சின்னதுரை மற்றும் காவிப்படை சொந்தங்கள் திருவிழா கலந்து கொண்டனர்.

    • பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பெரும்பாலை,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பஸ் ஸ்டாண்டில் தி.மு.க. முன்னாள் பொது செயலாளரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்ககளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,மாவட்ட பிரதிநிதி தனபாலன், ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத்குமார், சின்னு மஞ்ச நாயக்கன அள்ளி கவுன்சிலர் வையாபுரி, ராமகொண்ட அள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணன், நாகமரை ஊராட்சி செயலாளர் திருமுருகன், மஞ்சாரள்ளி புஷ்பராஜ், ஏரியூர் பகுதி கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சரும், பேராசிரியருமான அன்பழகனின் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி மத்தூர் தி.மு.க. (வடக்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தலைவரும், ஊராட்சி செயலாளருமான கமலநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம் ,கண்ணன்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர்,நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், கே.எட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், கண்ணுகானூர் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அதனைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கும் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், நாகராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு

    முன்னாள் மாவட்ட தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், தர்கா, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், கவுன்சிலர் விநாயகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், நகர துணை தலைவர்கள் பிலால், மரிய இருதயம், வட்டார தலைவர்கள் மாது, கோபால், அமல்ராஜ், முன்னாள் நகர தலைவர் முபாரக், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம், நிர்வாக அலுவலர் ராஜா, நிர்வாக கல்வி இயக்குனர் டாக்டர் செந்தில், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஷீபா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சதானந்தம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • உழவாலயத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு:

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் திருநகர் காலனியில் உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் உப தலைவரும், ஈரோடு நாடார் சங்க தலைவருமான உதயம் செல்வம், மாநகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, நாடார் சங்க உப தலைவர் முருகையா, செல்லசாமி, மோகன்ராஜ், பேங்க் பாண்டி, ஜோசப், வேல்பாண்டி, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×