என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா
- பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.
- மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அதனைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கும் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், நாகராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






