search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி."

    • திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    • நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    திருப்பூர் :

    சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி. நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டி.எம்.சி. நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. பிஏபி. திட்டத்தில் ஏற்கனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி. தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பங்கேற்றாா்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது.
    • ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்து ரோடு, எம்ஜிஆர் நகர் அருகே ஒரு கோடி மதிப்பில் பிஏபி கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணியை செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 126.100 கிலோமீட்டரிலிருந்து பிரிகிறது, கடந்த 1981 ம் ஆண்டு முதல் 1986 ம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது/

    இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270.650கிலோமீட்டர் ஆகும். இந்த வாய்க்காலானது திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும்.தன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12.108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.

    திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்படுவதால் ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமணன்.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவிபொறியாளர் கோகுல சந்தானகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம்,தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர். முத்து குமார்,நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகள்,காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை :

    திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    அணையில் இருந்து துவங்கும் பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் பல இடங்களில் வாய்க்காலில் செடி கொடிகள் படர்ந்தும் ஸ்லாப் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. பெரிய பாப்பனூத்து, சின்னபாப்பனூத்து பகுதியில் வாய்க்காலே தெரியாத அளவுக்கு செடிகளும் மரங்களும் வளர்ந்து மூடி உள்ளன. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைபடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மரங்களை வெட்டி அகற்றி எளிதாக தண்ணீர் செல்ல வசதி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் சகுந்தலாதேவி (வயது 14) என்ற சிறுமி கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது உடலை தீயணைப்பு படையினர் தேடியும் மீட்க முடியவில்லை. இதையடுத்து திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து பல்லடம், திருப்பூர்,காங்கேயம் தீயணைப்பு படையினர், காவல் துறை, வருவாய் துறையினர் இணைந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் அச்சிறுமியின் உடலை தேடினர். இந்தநிலையில் அலகுமலை கிராமம் ராமம்பாளையம் அருகில் உள்ள அமுக்கு பாலம் பகுதியில் சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

    இதனிடையே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.வி.வாய்க்கால் மற்றும் காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வி.கள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் எஸ்.பி. சசாங்சாய், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி அசோகன், ஊராட்சி தலைவர் சாந்தினி சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ×